சினிமா

இரும்புக்கை மாயாவி படம் இப்படி தான் இருக்கும்! மனம் திறந்த பிரபல இயக்குனர்!

Published by
பால முருகன்

லோகேஷ் கனகராஜ் சூர்யாவை வைத்து எடுக்கவுள்ள இரும்பு கை மாயாவி எப்படி பட்ட படம் என்பதை கலை இயக்குனர் சதீஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இரும்பு கை மாயாவி

நடிகர் சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படம் ‘இரும்பு கை மாயாவி’. லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தாலும் அவருடைய கனவு படமாக இருப்பது ‘இரும்பு கை மாயாவி’ தான். லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கிய சமயத்திலேயே ‘இரும்புக்கை மாயாவி’ படத்தின் கதையை சூர்யாவுடன் லோகேஷ் கனகராஜ் கூறினாராம்.

கதையை கேட்டு பூரித்துப்போன சூர்யா 

லோகேஷ் கனகராஜ் கூறிய கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதாம். இருந்தாலும் படத்தின் கதையை பாதி மட்டும் இருக்கும் நிலையில், மீதி கதை மற்றும் லோகேஷ் கனகராஜ் தான் கமிட் ஆகியுள்ள படங்களை இயக்கி முடித்த பிறகு ‘இரும்பு கை மாயாவி’ படத்தின் வேலைகளை தொடங்குவார். இதனை லோகேஷ் கனகராஜே பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

இரும்புக்கை மாயாவி படம் எப்படி இருக்கும்? 

இந்த நிலையில், இரும்புக்கை மாயாவி படம் எப்படி இருக்கும் என்பது பற்றி கலை இயக்குனர் சதீஷ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இரும்பு கை மாயாவி  படத்தை பற்றி நாங்கள் கைதி படம் சமயத்தில் பேசிக்கொண்டு இருந்தோம். அந்த படம் கண்டிப்பாக பயங்கரமாக இருக்கும். அந்த கதையை கேட்டவுடனே நான் மிரண்டு போய்விட்டேன் பிறகு இந்த கதையை நாம் எப்படி செய்யப்போகிறோம் எப்படி அவர் எடுக்கப்போகிறார் என்றெல்லாம் யோசனை எனக்கு வந்தது.

தேள் கொடுக்கு ரெடி! ரசிகர்களுக்கு ரோலக்ஸ் அப்டேட் கொடுத்த சூர்யா!

ஆனால், இப்போது அந்த படத்திற்கு தயாராகிவிட்டோம். இந்த படம் தள்ளி போக காரணம் நாம் இன்னும் தயாராகவில்லை அதனால் தள்ளி செல்வதாக நான் நினைத்துக்கொள்வேன். ஆனால், படம் சூர்யாவின் கேரியரில் சிறந்த படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஸ்டைலில் ஒரு fiction  படத்தை எடுக்க போவதாகவும் சதீஷ் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

30 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago