சினிமா

நடிச்சா ஹீரோ தான் என இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? வில்லனாக களமிறங்கும் மைக் மோகன்!

Published by
பால முருகன்

1980 காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மைக் மோகன் கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படியே சில ஆண்டுகள்  சினிமாவை விட்டு விலகிவிட்டார்.

இந்த நிலையில், தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நல்ல கதாபாத்திரம் கொண்ட நல்ல படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். அந்த சமயம் தான் தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கதையை கூற உடனடியாக தான் நடிக்கிறேன் என படத்தில் நடிக்க மைக் மோகன் உறுதிகொடுத்துவிட்டாராம். இவர் தளபதி 68 படத்தில் நடிப்பது படத்தின் பூஜையில் கலந்து கொண்டபோது உறுதியாக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் அவர் விஜய்க்கு அண்ணன் அல்லது ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தான் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது வெளியான தகவல் என்னவென்றால், இந்த தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதே நடிகர் மைக் மோகன் தானம். ஆரமப காலகட்டத்தில் காதல் படங்களில் நடித்து வந்த மைக் மோகன் வில்லனாக நடித்தால் எப்படி செட் ஆகும் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது.

உண்மையாகவே படத்தில் அவர் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தளபதி 68 படத்தின் டீசர் டிரைலர் வெளியான பிறகு தான் தெரியவரும். மேலும், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள மைக் மோகன் இந்த தளபதி 68 படத்தில் நடிக்க இதுவரை எந்த படத்திலும் நடிக்க வாங்காத சம்பளம் வாங்குகிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும். ஏற்கனவே இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்கவிருந்தார். பிறகு சில காரணங்கள் படத்தில் நான் நடிக்கவில்லை என்று படத்தில் இருந்து விலகிவிட்டார். அந்த சமயம் தான் அவர் ஹீரோவாக ஹரா படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

2 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

5 hours ago