சினிமா

சம்பளத்தில் நயன்தாராவை மிஞ்சிய த்ரிஷா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

Published by
பால முருகன்

தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். இவர் தான் நடிக்கும் படங்களில் சம்பளமாக 10 கோடி வரை வாங்கி வருவதாக கூறப்பட்டது. கடைசியாக இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்கு கூட அவர் சம்பளமாக 10 கோடி வரை வாங்கியதாக கூறப்பட்டது.

இப்படி ஒரு படத்திற்கு நடிக்கவே 10 கோடி சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார். ஆனால், தற்போது அவரையே நடிகை திரிஷா மிஞ்சி இருக்கிறாம்.  த்ரிஷா கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு முன்பு வரை அவர் சம்பளமாக 3 கோடி வாங்கி வந்தார்.

சம்பளத்தை சரியாக கொடுக்காத தயாரிப்பாளர்! கடுப்பாகி மெகா ஹிட் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா?

குறிப்பாக பொன்னியின் செல்வன் 1 படத்திற்காக 2 கோடியும், பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக 3 கோடியும் சம்பளம் வாங்கினாராம். அதன் பின், லியோ படத்தில் நடிக்கும்போது தனது சம்பளத்தை 2 கோடிகள் உயர்த்தி 5 கோடி வாங்கினாராம். லியோ  திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து இருக்கும் நிலையில், தற்போது நடிகை த்ரிஷா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறாராம். கிட்டத்தட்ட லியோ படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களில் சம்பளமாக 10 கோடிகளுக்கு மேல் கேட்கிறாராம்.

அடடா! தொழில் பக்தினா இது தான்…கோலிவுட்டை வியக்க வைத்த விஜய், த்ரிஷா!

இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் த்ரிஷா தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 10 கோடிகளுக்கு மேல் வாங்கி வருவதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த நாயன்தாராவை தற்போது த்ரிஷா பின்னுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகை த்ரிஷா தற்போது அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக்லைஃப் ‘ திரைப்படத்திலும் நடிக்க த்ரிஷாகமிட் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

8 hours ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

9 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

11 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

12 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

12 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

13 hours ago