Joe movie box office [File Image]
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 4-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது. ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் காதல் கதையம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை அருமையாக இருந்த காரணத்தால் படம் மக்களுக்கு பிடித்துப்போக படத்தை கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
விமர்சன ரீதியாக பெரிய வெற்றிபெற்றுள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அதன்படி, படம் வெளியாகி தற்போது வரை தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவலை பார்க்கலாம். தமிழகத்தில் மட்டும் இந்த ஜோ திரைப்படம் 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், ஜோ திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்து இருப்பதால் அந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஹாட்ஸ்டார் கைப்பற்றியது. படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. எனவே, திரையரங்குகளில் படம் பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…