கார்த்தியுடன் ஜாலியாக சுற்றும் அரவிந்த் சாமி! வெளியானது புது பட பர்ஸ்ட் லுக்!

Published by
பால முருகன்

கார்த்தி : நடிகர் கார்த்தியின் 27-வது படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

96 திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரேம் குமார் தற்போது நடிகர் கார்த்தியின் 27-வது திரைப்படத்தினை  இயக்கி வருகிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தங்களுடைய 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தன் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் அரவிந்த் சாமி, நடிகை ஸ்ரீ திவ்யா இன்னும் சில பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா பெயரை தவிர படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயரை வெளியிடாமல் படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும் தலைப்பு இன்று வெளியாவதாக நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது படத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும் தலைப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டரில் நடிகர் கார்த்தியுடன் நடிகர் அரவிந்த் சாமி சைக்கிளில் பேசி கொண்டு செல்வது போல காட்சி இடம்பெற்றுள்ளது. படத்திற்கு ‘மெய்யழகன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிற தொடங்கி இருக்கிறது. இந்த அப்டேட்டை தொடர்ந்து அடுத்ததாக படத்தில் நடிக்கும் பிரபலங்கள், பாடல்கள், டீசர், ட்ரைலர் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

3 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

27 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago