SULOCHANA [Image source : file image]
பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5.30க்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த சுலோச்சனாவின் மகள் காஞ்சன், சில நாட்களுக்கு முன்பு சுலோச்சனா மூச்சுத் திணறல் மற்றும் வயது தொடர்பான பிற நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சுலோச்சனா ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஜூன் 3ம் தேதி சனிக்கிழமையன்று, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தொடர்ச்சியான ஆக்ஸிஜன் உதவியுடன் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். பின்னர், ஜூன் 4 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மும்பை மருத்துவமனையில் மரணமடைந்தாராம்.
300க்கும் அதிகமான படங்கள்:
1940களில் மராத்தி படங்களில் நடிக்க தொடங்கிய சுலோச்சனா, நடிகர் சம்மி கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுடன் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான பாலிவுட் நடிகர்களுக்கு தாயாக நடித்துள்ளார்.
விருது வாங்கிய சுலோச்சனா:
சுலோச்சனாவுக்கு 199 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2009 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசிடமிருந்து மதிப்புமிக்க மகாராஷ்டிரா பூஷன் விருதும் வழங்கப்பட்டது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…