prashanth goat [file image]
சென்னை : விஜய் படங்கள் என்றாலே வெளியாவதற்கு முன்னதாக நெகடிவான விமர்சனங்கள், சர்ச்சைகள் இல்லாமல் வெளியானது இல்லை. அந்த வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படமும் கூட நெகடிவான விமர்சனங்களுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
படம் இன்னும் வெளியாக பல நாட்கள் இருக்கிறது. இருப்பினும் படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் விஜய் லுக் என அனைத்துமே நெகட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது இது அனைத்திற்கும் கண்டிப்பாக கோட் படம் வெளியாகி பதிலடி கொடுக்கும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரசாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது கோட் படத்திற்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி பேசியுள்ளார். சென்னையில் இது குறித்து பேசிய அவர் ” கோட் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றி எந்த கவலையும் இல்லை. கண்டிப்பாக படம் வெளியான பிறகு கண்டிப்பாக படம் பற்றி தான் பேசுவார்கள்.
படத்தினை வெங்கட் பிரபு மிகவும் அருமையாக எடுத்து இருக்கிறார். படம் வெளியான பிறகு நெகட்டிவ் விமர்சனங்கள் பரவியவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள்” எனவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பிரசாந்த் பேசியதை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது.
கோட் படம் எந்த மாதிரி ஒரு கதை கொண்ட படமாக இருக்க போகிறது. படத்தில் என்னென்ன சஸ்பென்ஸ் எல்லாம் இருக்க போகிறது என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்துள்ளனர். அவர்களின் காத்திருப்பிற்கும், நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் வரும் செப்டம்பர் 5 விடை கிடைக்கும்….
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…