சினிமா

ஒவ்வொரு காட்சியும் ‘மிரட்டல்’ தான்! கங்குவா அப்டேட் விட்ட பிரபலம்!

Published by
பால முருகன்

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், படத்தில் பாடல்களை எழுதி இருக்கும் பாடலாசிரியர் மதன் கார்க்கி கங்குவா படம் பற்றிய சில விஷயங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” கங்குவா திரைப்படம் அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. படத்தின் பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது.

இதுவரை நான் படத்தில் சில காட்சிகளை பார்த்தேன். பார்த்து மிரண்டே போய்விட்டேன் அந்த அளவிற்கு சண்டை காட்சிகள் எல்லா பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா அவதார் படம் போல புது உலகத்தை வைத்து எடுத்து இருக்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஹீரோயின் அழகா இல்லையா? கொந்தளித்த கார்த்திக் சுப்புராஜ்!

அவருடைய ஸ்டைலில் புதிதாக உருவாக்கியுள்ள அந்த உலகத்தில் புதிய கடவுள், புதிய கலாச்சாரம் என சில விஷயங்களை சேர்த்து இருக்கிறார். படம் நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். இந்த திரைப்படத்தில் வரும் வரலாற்று காட்சிகள் ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது. அந்த அளவிற்கு பழமையானதை பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும் வகையில் கங்குவா படக்குழு எடுத்துள்ளது.

படம் 10 மொழிகளில் எடுக்கப்பட்டு வருவதால் நாங்கள் பணியாற்றிய மற்ற மொழி உரையாடல் எழுத்தாளர்கள் அனைவரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். அவர்களும் படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு படம் பயங்கரமாக வரப்போவதாக கூறினார்கள்” எனவும் பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார். இவர் படத்தை பற்றி இப்படி பேசியுள்ளது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. மேலும், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை இருந்தாலும், படம் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 11 -ஆம் தேதி 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

5 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

5 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

6 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

6 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

7 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

7 hours ago