கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார். படம் வெற்றி பெற்றதை போல் படத்திலுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆம், விரைவில் ஜிகர்தண்டா 2 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ளதாம்.
அந்த படத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் மற்றும் மற்றோரு பெரிய நடிகரும் நடிக்கவுள்ளராம். மேலும் இரண்டாம் பாகத்தையும் தயாரிப்பாளர் கதிரேசனே தயாரிப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
மேலும் நடிகரும் நடன இயக்குனருமான ராகவ லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தாக சந்திரமுகி 2 மற்றும் அதிகாரம் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…