nayanthara ayya [file image]
Nayanthara : நயன்தாராவை ஒரு முறை கூட நேரில் பார்த்தது இல்லை என இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகை என்றால் நயன்தாரா தான். தற்போது திருமணம் முடிந்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் கூட அவருடைய மவுசு மட்டும் குறையவே இல்லை. படங்கள் தோல்வி அடைந்து அவருடைய சம்பளம் படத்திற்கு படம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.
இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு ஆரம்ப காலத்தில் அதாவது நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் பாடல் பெரிய வரவேற்பை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின் மூலம் தான் நயன்தாரா சினிமாவில் நடிக்கவே ஆரம்பித்தார் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் பாடல் நயன்தாராவை மிகவும் பிரபலமாக்கியது என்றே சொல்லலாம். இந்த பாடல் வெளியான சமயத்தில் எல்லாம் டிவி சேனல்களில் அந்த பாடல் தான் ஓடிக்கொண்டு இருக்கும். அந்த பாடலை வைத்து தான் நயன்தாராவின் பெயரையே வெளியே தெரியவந்தது.
இப்படியான பெரிய அறிமுக பாடலை நயன்தாராவுக்காக கொடுத்த இசையமைப்பாளர் பரத்வாஜ் இன்னுமே நயன்தாராவை ஒரு முறை கூட நேரில் பார்க்கவே இல்லயாம். இதனை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நயன்தாரா இவ்வளவு பெரிய நடிகையாக வளருவார் என்று நினைக்கவே இல்லை. அந்த பாட்டு இவ்வளவு பெரிய ஹிட் ஆகி இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அவர் சினிமா துறைக்கு வந்து இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. நான் இன்னும் அவரை நேரில் கூட பார்க்கவில்லை” என கூறிஉள்ளர். இதனை பார்த்த நெட்டிசன்கள் சினிமாவில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…