Nayanthara [file image]
Nayanthara : தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் நடிகை நயன்தாரா அதிர்ச்சியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
நடிகை நயன்தாரா சமீபகாலாமாக நடிக்கும் படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘அன்னபூரணி’ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான இறைவன், கனெக்ட், கோல்டு, உள்ளிட்ட படங்களுமே பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த படங்களின் தோல்வியை தொடர்ந்து நயன்தாரா தொடர்ச்சியாக படங்களும் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், தமிழில் மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு தமிழில் பெரிய அளவுக்கு நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில், தான் நடிகை நயன்தாரா மலையாள சினிமா பக்கம் சென்றுள்ளாராம். தமிழில் அடுத்ததாக பட வாய்ப்புகள் இல்லை மலையாள சினிமாவிற்கு சென்று அங்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்தால் பட வாய்ப்புகள் குவியும் என நயன்தாரா திட்டமிட்டு இருக்கிறாராம். அந்த வகையில், தற்போது மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு முன்னதாக நடிகை நயன்தாரா நிவின் பாலிக்கு ஜோடியாக கடந்த 2019-ஆம் ஆண்டு லவ் ஆக்ஷன் டிராமா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இருந்தாலும், தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் மலையாள சினிமாவுக்கு சென்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…