விஜய் சார் ரஜினி சாரோட பெரிய ரசிகர் – நெல்சன் திலீப் குமார்.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் ரஜினி, விஜய். தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார். இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் பேசியது குறித்து நெல்சன் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியது ” விஜய் சார் ரஜினி சாரோட ரசிகர்னு எல்லாருக்கும் தெரியும். பீஸ்ட் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது விஜய்சார் என்கிட்ட வந்து ரஜினி சார் அடுத்த படத்துக்கான கதைகள் கேட்க ஆரம்பிச்சிருக்கார். நீங்க ஏன் அவரிடம் கதை சொல்ல முயற்சி பண்ணக்கூடாது என்று கேட்டார்.

ரஜினி சார் லெஜெண்ட் நான் எப்படி அவருக்கு கதை பண்றதுன்னு மிகப்பெரிய தயக்கம் இருந்துச்சு. என் தயக்கத்தை உடைச்சவர் விஜய் சார் தான்.நீங்க கதை மட்டும் பண்ணுங்க. உங்களுக்கு கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னார் அவர் சொல்லி ஸ்பார்க் ஆன பிறகுதான் நான் கதை பண்ணலாமான்னு யோசிக்க ஆரம்பிச்சேன். விஜய் சார் இன்னும் மோட்டிவேட் பண்ணினார்.

நீங்க இப்பவே கதை ரெடி பண்ணுங்க நெல்சா இந்தப் படம், முடிந்தவுடன் ரஜினி சார் படம் தொடங்கறதுக்கும் சரியா இருக்கும். உங்களுக்கு நடந்திடும் உறுதியா சொன்னார் …  அதைபோல் நடந்துவிட்டது.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

11 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

12 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

13 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

14 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

15 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

16 hours ago