தமிழ் சினிமாவில் ஜாலியான கூட்டணி என்றால், நெல்சன்- சிவகார்த்திகேயன்- அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான “டாக்டர்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில், படத்தின் பாடல்கள் வெளியாகும்போது, அதற்கான ப்ரோமோவை ரசிகர்களுக்கு பிடித்தவாறு கலகலப்பாக செய்து வெளியிட்டு அணைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தனர். இதனாலே இந்த கூட்டணி மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.
தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் விஜய்யை வைத்து “பீஸ்ட்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கும் அனைத்து படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். ஒரு பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதுகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர்களது கூட்டணி குறித்து நெல்சன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நெல்சன் ” நானும் அனிருத்தும் இணைந்து ஒரு படலை பண்ண உட்காரும் போதே, எங்களுக்கு ஏற்ற ஒரு பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் தான் மனதில் தோன்றுவார். கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’, டாக்டர்
படத்தில் ‘செல்லம்மா’, பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து இந்த எல்லா பாடல்களையுமே அவர் எழுதும் போது அவ்ளோ கவனம் எடுத்து எழுதுவார்.
அவர்கிட்ட அதிகமா சீரியஸ்னெஸ் இருக்கும். ஒரு பாட்டு அவர்கிட்ட கொடுத்துட்டா, அந்தப் பாட்டு ரெக்கார்ட்டிங் முடியற வரைக்கும் தொடர்பிலே இருப்பார். “பீஸ்ட்” படத்தில கூட அவர் எழுதினா சரியா இருக்கும்னு நினைச்சு கூப்பிட்டோம். அவரும் இதை புரிஞ்சுக்கிட்டார். எங்க நட்புக் கூட்டணி எப்பவும் தொடரும்.” என நெகிழ்ச்சியுடன் நெல்சன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…