தமிழகம், மற்றும் ஆந்திராவில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாளை ரிலீஸ் ஆக உள்ள அந்த படத்தில் பாடல் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் தமிழில் வெளியிட உள்ளது.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழில் ஊ சொல்றியா மாமா எனும் பாடலுக்கும், ஊ அண்டே மாமா எனும் தெலுங்கு பாடலுக்கும் தமிழிலும் தெலுங்கிலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
அந்த பாடலில் ( தமிழிலும் , தெலுங்கிலும் ) வரிகள் ஆண்களை மிகவும் இழிவாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளது என தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் அமைப்பும், ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் அமைப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றன.
ஆனால், இந்த பாடல், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இளைஞர்கள் மத்தியில் இணையத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா ஆட, ஆண்ட்ரியா பாட நாளை புஷ்பாவின் அந்த பாடல் காட்சி தருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…