இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து விரைவில் தொடங்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று கூறியுள்ள நடிகர் கமலஹாசன் அதற்கான பயணத்தை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் கனரா வங்கியின் டிஜிட்டல் கிளை திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டார். அதில் உரையாற்றிய அவர் அடுத்த மாதம் தொடங்கும் அரசியல் பயணத்தில் இன்னும் நிறைய தோழர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதே, வரும் பிப்ரவரி 21-ம் தேதி தமது அரசியல் பயணத்தை […]
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் அகிய மாநிலங்களில், பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி இரு மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளிக்கப்பட்டுள்ளது. பத்மாவத் திரைப்படத்திற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மாற்ற கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன மாநிலங்கள் யாவும் பிஜேபி கட்சியின் ஆட்சியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின், பாவனா சற்று பிரச்சனைகளில் சிக்கியதால் அவர்களது திருமணம் தள்ளிபோடப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகை பாவனாவின் திருமணம் இன்று காலை திருசூர் கோவிலில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ […]
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, “ரஜினிகாந்த் 100 கோடிக்கும் மேல் வசூலாகும் படத்தில் நடிப்பதால் தான் அந்த பில்டப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இங்கு ஏதாவது மாற்றவேண்டும் என்று விரும்பினால் இத்தனை வருடம் என்ன செய்து கொண்டிருந்தார். கட்சி தொடங்கி தான் நல்லது செய்யவேண்டுமா..?”என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஆந்திராவில் 20க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக்கொன்றபோது […]
நடிகர் சூர்யா இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதை சன்மியூசிக் சேனலின் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கிண்டல் செய்து பேசினர். சூர்யாவின் உயரத்தைக் கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சூர்யா ரசிகர்கள் சன் டி.வி. அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக சன் நெட்ஒர்க் நிறுவனத் தலைவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தனிப்பட்ட ஒருவரைப் பற்றி அநாகரிகமான […]
‘பத்மாவத்’ பட ரிலீசை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளை தட்ட உள்ளோம் என்றார். அது குறித்து விரிவாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை. நவம்பர் மாதத்தில் ராஜபுத்திர இன தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, ம.பி.,யில் பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அறிவித்தார். தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத், […]
சிம்புவை வைத்து ‘ஏஏஏ’ படத்தை இயக்கி நஷ்டத்தை அடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து மீண்டும் ஓர் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகை யார் என்ற விவரம் வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் […]
ஜெயம் ரவி நடிக்கும் “டிக் டிக் டிக்” இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் முதல் விண்வெளிப் படமாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படம் ஜனவரி 26ம் தேதி வெளியாக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் 26ம் தேதி வெளியாகாது என்றும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியாக படக்குழுவினர் திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் சூர்யாவின் 36 படம் குறித்து செலவராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்றும் அதற்கு அவர் உற்சாகத்தையும் தெரிவித்துள்ளார். https://twitter.com/selvaraghavan/status/954703747682246657 Welcome on board my "MAESTRO" @thisisysr .. Once again, let's create some magic.. Excited and exhilarated ????????????#Suriya36 #S36Diwali2018@Suriya_offl @prabhu_sr @DreamWarriorpic pic.twitter.com/kodlcLbH7x — selvaraghavan (@selvaraghavan) January 20, 2018
பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா நடிகர் ரஜினிகாந்த் மீதும் இயக்குனர் கஸ்தூரி ராஜா மீதும் பணம் மோசடி புகார் செய்திருந்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ரஜினிகாந்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் போத்ரா மற்றும் அவர் மகன்களும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தன் மீது அவதூறாக பேசியதாக ரஜினி மீது போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கான பதிலை ரஜினி அவர்கள் வரும் 25ம் தேதிக்குள் அளிக்க கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சூர்யா மீது தொடர்ந்து வரும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். இதை குறித்து சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.” என்று அவர் கூறியுள்ளார். https://twitter.com/Suriya_offl/status/954581275720888320 தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள […]
பிரபல இயக்குனர் பார்த்திபன் பெரியார் விருதை அண்மையில் பெற்றுள்ளார். இதை குறித்து அவர் பேசும் பொழுது தான் பெரியாரை வாழ்த்தி வணங்கி துவங்கியதாக கூறியுள்ளார். இதை பற்றி கேணி படக்குழு சந்திப்பில் பேசுகையில், ‘பிள்ளையாரை செருப்பால் அடித்த பெரியாரை நான் செருப்பால் அடிப்பேன்’ என்று கூறியிருந்ததாக சுட்டிக்காட்டினார். இப்படி பேசுவது தனி பட்ட நபரின் கருத்து என்றும் இதனால் யாரையும் தரைகுறைவாக நடத்த அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை வாட்டி வதைப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக பல நடிகைகள் ஓபனாகவே திரைத்துறையில் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசுகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு நடிகை பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுதிள்ளர் . இதில் குறிப்பாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொந்தரவு குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றனர். தற்போது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ‘என்னை தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார், ஆனால், நான் மறுத்துவிட்டேன். இதற்கு முன்பு இதுபோன்ற கசப்பான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன், ஆனால், இந்த […]
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்திற்கு யார் என்ற கேள்விக்கு பதிலாய் தனது வளர்ந்து நிற்கிறார் நடிகர் விக்ரம். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. தற்போது இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது. அதில் கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார். இப்படத்தை […]
சன் மியுசிக் தொகுப்பாளினி அஞ்சனா தான் சன் மியூசிக்கில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். இவர் சன் மியுசிக்கில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தனது பேச்சால் பல ரசிகர்களை கொண்டவர். இவர் சமீபத்தில் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர் தான் தொடர்ந்து சன் மியுசிக்கில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தான் சன் மியுசிக்கில் இருந்து விலகிவிட்டதாகவும், 10 […]
உலகநாயகனின் மகளும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கவர்ச்சியாக நடிப்பதில் பேர் போனவர். இவர் அவ்வபோது கவர்ச்சியான படங்களை கசிய விட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துபவர். அண்மையில் பெமினா என்ற பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். source : www.dinasuvadu.com
இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் போட்டோ சூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த புகை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக […]
கவிஞர் வைரமுத்து மீது இன்று ஒரே நாளில் 2 வழக்குகள் பதிவு… தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கொளத்தூர் ஆகிய காவல்நிலையங்களில் புகார் அளித்தன. இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சிவசேனா அமைப்பைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் வைரமுத்து மீது இன்று புகார் அளித்தார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மீது […]
கவிஞர் வைரமுத்து மீது ஆண்டாள் விவகாரத்தில் பல்வேறு சர்சைகளும் ஆதரவும் வரும் நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான எஸ்.வி.சேகர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதுாறாக பேசியதாக கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், இயக்குநர் விசு, நடிகர் எஸ்.வி.சேகர், குட்டிபத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வைரமுத்துவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ஆரியர், திராவிடர் என கி.வீரமணி தவறாக பேசி வருவதாகவும், அக்குளில் வெங்காயம் வைத்தால் […]
சொகுசு கார் வாங்கிய வழக்கில் அமலபால் போலீசில் சரணடைந்தார் .. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மற்ற மாநில சொகுசுகார்களை பதிவு செய்வது அதிகரித்து வந்தது. சொகுசு கார்களை வாங்கும் பிரபலங்கள், அதனை வேறொருவரின் பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையாளர் நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ்கோபி, நடிகர் ஃபகத் பாசில், நடிகை அமலாபால் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு […]