பத்மாவத் திரைப்படம் வெளியானது.. சென்னையில் சத்யம் திரையிரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.. வடமாநிலத்தவர் ஏராளமானோர் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.. பத்மாவத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்றும், திரைப்படம் நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.. மேலும் இப்படத்தினை தடை செய்யக்கோரி ராஜஸ்தான்,உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் ராஜ்புத் கர்ணி சேனா மற்றும் பல ஹிந்த்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல ஹாசன்.மேலும் அவர் கிராமங்களை தத்தெடுத்து முன்மாதிரியாக மாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.நான் பெயரிட்டுள்ள “நாளை நமதே” என்னும் பெயர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்தினாலும் பரவாயில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இவர் தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து துவங்க போவதாகவும் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை சாவித்ரி கேரக்டரில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சாவித்ரி தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு தங்க காசினை பரிசாக கொடுக்கும் […]
நடிகை அனுஷ்கா ‘பாகுபலி-2’ படத்தை அடுத்து தற்போது ‘பாகமதி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜனவரி 26-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையில் உடல் எடை அதிகரித்த அனுஷ்கா அதனை குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.. . அதில் அவர் வெற்றியடைந்து தனது உடல் மெலிந்த சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த பின்பு, தனது மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் கௌதம்மேனன். ஏற்கனவே, […]
சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வீரம்’ ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் முதல் இரண்டு படங்கள் நல்ல வரவேற்பினை மக்களிடையில் பெற்றது. ஆனால் ‘விவேகம்’ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. எனினும், அஜித் தனது 4வது படமான’விஸ்வாசம்’த்தில் சிவாவிற்கு வாய்பளித்துள்ளார். இதுக்குறித்து அஜித் தன் நட்பு வட்டாரத்தில் கூறுகையில் ‘சிவா எனக்கு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார், அவர் வேறு ஒருவருடன் படம் இயக்க செல்லும் போது ஹிட் இயக்குனர் என்ற பெயரில் தான் […]
நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நாயகி. அவரின் நடிப்பில் பாகமதி நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,”பெண்கள் பல துறைகளில் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பெண்களை தவறான நோக்கத்தில் தொடும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும். அவர்கள் மனதில் இருக்கும் அகங்காரத்தை அழிக்க வேண்டும்” என ஆவேசத்துடன் பேசினாராம் அனுஷ்கா.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி-62’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி சென்னையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடற்கரைக்கு அருகில் பல படகுகளை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக புனே செல்லவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி62 படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தின் பட்ஜெட் பற்றி பேசியுள்ளார். ‘விஜய் படத்துக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. படம் பிரமாண்டமா வரணும்’ என அவர் கூறியுள்ளாராம்.
சன் பிக்சார்ஸ் தயாரிப்பில் எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர் இல் நடக்கிறது. இப்படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக அனல் அரசு இணைகிறார். இவர் தளபதியுடன் இணைந்து கத்தி,பைரவா மற்றும் மெர்சலில் இணைந்து பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் சூப்பர்ஸ்டார் பாலிவுட் பாட்ஷா என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கிங் கான் ஷாருக்கான் தான்.இந்நிலையில் அவருக்கு வெளிநாட்டு மண்ணில் ஒரு சிறப்பு கெளரவம் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், நாட்டின் பெருமைகளைப் பறைசாற்றினார். பெண்களை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஷாருக்கான் தம் வாழ்வை செப்பனிட்ட மனைவி, தங்கை, மகள் ஆகிய பெண்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பெண்களிடம் வலியுறுத்தியும் கட்டாயப்படுத்தியும் ஒப்புதலைப் பெறுவதை விட, அவர்களிடம் கெஞ்சிக் […]
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் ‘ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன்’ படம் திரைக்கு வரவுள்ளது.தற்போது இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் ‘உங்கள் பிறந்த நாளுக்கு விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்..??’ என கேட்டார். அதற்கு அவர், ‘சந்தோஷம் தான்.என்னால் அவர்கள் ஒற்றுமையானால் மிகவும் சந்தோஷப்படுவேன்’ என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் “கயல்” படத்தில் நடித்த நடிகர் சந்திரன் மீது தயாரிப்பாளர் பிரபு என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் இருவரும் ‘நாங்கள் திட்டம்போட்டு திருடுற கூட்டம்’ படம் தயாரிக்கும் போது ரூ.5 கோடி வாங்கியதாக கூறியுள்ளார். படம் வெளியாகும் நேரத்தில் முக்கிய தயாரிப்பாளர் பட்டியலில் இருந்து அவர் பெயரை எடுத்துவிட்டதாகவும் இன்னும் அந்த பணத்தை கொடுக்கவில்லை என்றும் புகார் பதிவு செய்துள்ளார் . மேலும் அவர்,”கடந்த ஒரு வருடமாக நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் […]
இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோருடன் இணைந்து மிஷ்கின் நடித்து, எழுதி, தயாரிக்கும் படம் ‘சவரக்கத்தி’. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குநரும் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்பொழுது பேசிய மிஷ்கின், ” இந்த படத்தை திரையுலகில் தான் பார்க்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.அவரவர் தங்கள் வேலையை நியாயமாகப் பார்ப்போம். இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸில் போட நான் அனுமதி தருகிறேன்” என்று கூறியுள்ளார். https://www.youtube.com/watch?v=yoxjUAI1oX4
பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களை பெரிய சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய அரசாங்கத்திடம் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை குறித்து நடிகரும் இசைமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், விவசாயிகளின் கஷ்டத்தை மனதில் வைத்து கொண்டு மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/gvprakash/status/955640929091661824 விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் — G.V.Prakash Kumar (@gvprakash) January 23, 2018
நடிகர் சியான் விக்ரம் தற்போது ‘சாமி2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படமானது தெலுங்கில் ஹிட் ஆன ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும், இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதேபோல் உங்களுடைய குரு யார்…?? என செய்தியாளர் கேட்டதிற்கு முன்பு என்னுடைய குரு ஸ்ரீராம்,பாலா… ஆனால் கடைசி ரெண்டு மூனு மாசமா துருவ்விக்ரம் தான் என்னோட குரு […]
ஒரு படம் தயாராகி இந்தியாவில் இந்தியாவில் வெளியாவதற்குள் தயாரிப்பாளரின் உசுரே போய்விடும் அளவுக்கு தணிக்கை ஒரு பாடு படுத்திவிடுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் நடித்திருக்கும் படம் பத்மாவதி. இந்த படம் எப்போ ரிலீஸ் தேதி அறிவித்தார்களோ அப்போதே ஆரம்பித்தது இந்த பிரச்சனை படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இப்படம் வெளியாக தடை எனவும், இன்னும் சிலர் படத்தில் நடித்தவர்களின் தலையை வெட்டி […]
சின்னத்திரை நட்சத்திரங்கள் தற்போது வெள்ளித்திரையில் வருவது பெரிய விஷயமில்லை என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டது. சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் தற்போது கலக்கப்போவது யாரு புகழ் தீனா பவர் பாண்டி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார்.தற்போது தனுஷ் தயாரிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘கத்தப்பனாயி ரித்திக் ரோஷன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜோதிகா ஒரு தைரியம் வாய்ந்த பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியாக இருந்தது. அனால் இப்பொழுது சில காரணத்தினால் பட வெளியீட்டை படக்குழு ஒரு வரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இப்படம் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சன் பிக்சார்ஸ் தயாரிப்பில் எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்து வரும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.சி.ஆர் இல் நடக்கிறது. இப்படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் வசனகர்த்தாவாக பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார். இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 36’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இதை பற்றி இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படம் வரும் 2018ன் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனுடன் ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளது. https://twitter.com/selvaraghavan/status/955357664527007744 Yes..The journey begins ????????????????????#Suriya36 #S36Diwali2018 @Suriya_offl @prabhu_sr https://t.co/MTNKkkYmes — selvaraghavan (@selvaraghavan) January 22, 2018
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்,சாய் பல்லவி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ வின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதை குறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘அனைவரின் வாழ்த்துக்களுடன் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/dhanushkraja/status/955305182316802048 With all your blessings and love #maari2 shoot starts FROM TODAY @directormbalaji @Sai_Pallavi92 @ttovino @thisisysr @Actor_Krishna @omdop — Dhanush (@dhanushkraja) January […]