தீபாவளி தினத்தன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை படைத்த திரைப்படம் ‘மெர்சல்’. இப்படம் சுமார் 255 கோடி வசூல் செய்திருந்தது. இப்படத்தின் 100 வது நாளை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. இப்படம் வெளியாகி சில மாதங்களே ஆகிய நிலையில் தொலைகாட்சியில் பொங்கலன்று வெளியாக உள்ளது. இது 100வது நாளை கொண்டாட இருந்த விஜய் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. source : www.dinasuvadu.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்களிடமும் ரசிகர்களிடமும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட நாள் முதல் இன்று வரை வசூல் வேட்டை நடத்திவருகிறது. முதல் வாரத்திலேயே ரூ 38 கோடி வசூல் செய்திருந்தன. இப்படம் இன்று வரை தமிழகத்தில் மட்டுமே ரூ.44 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ.60 கோடி வசூலை தாண்டி இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இப்படம் இன்னும் தெலுங்கில் டப் செய்யப்படவில்லை. அது எப்படி வசூல் செய்ய […]
பில்லா 2, சூது கவ்வும், பீட்சா 2 போன்ற படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவர் தற்போது ஆக்சிஜென் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கடத்தல் கும்பலை துரத்தி செல்வது போன்ற காட்சி கடலில் நடந்து வருகிறது. காட்சியின் பின்பு அனைவரும் படகில் ஏறி சென்றனர். அனால் அவரை மட்டும் காணவில்லை. படபிடடிப்பு இடத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்திற்கு கடலால் அடித்து செல்லப்பட்டார். பின்பு மீட்பு குழு சென்று தேட அவர் உயிர் பிழைத்ததாக […]
போலீஸ் படங்கள் இயக்குவதில் புகழ்பெற்ற இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் ஆரம்பமானது. இப்படத்தின் படப்பிடிப்பு பழனி, காரைக்கால் மற்றும் நெல்லையில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருநெல்வேலியில் இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். ஃபிப்ரவரி மாதம் இறுதியில் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தை காவல் நிலையம் போல செட் ஆக்கி படம் பிடித்திருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது […]
நடிகர் விவேக், சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிரீன் கலாம் எனும் அமைப்பை தொடங்கி தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் இவர். அப்துல்கலாமின் கனவுகளை நிறைவேற்றும் திட்டமான கிரீன் கலாம் எனும் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார் விவேக்.கிரீன் கலாம் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி, மரம் நடும் விழா ஆகியவை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரைச் […]
சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’.இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல் முதலாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார். தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சைராவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் ஒப்பாயா. […]
பாலா தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தின் பணியை வேகப்படுத்தியிருக்கும் பாலா குற்றப்பரம்பரை படத்தையும் இயக்க உள்ளாராம். வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை கதையை பாலா இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் திடீரென்று பாரதிராஜா அதே கதையை மையமாக வைத்து படம் இயக்கி நடிப்பதாக தடபுடலாக படப்பிடிப்பு தொடங்கினார். ஆனால் சில மாதங்களில் அதன் […]
மன்னர் வகையறா படத்தின் ஆடியோ வெளியீட்டில் பேசிய இயக்குனர் பூபதி பாண்டியன், தனக்கும், விமலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதுபற்றி கூறினார். இதுபற்றி பூபதி பாண்டியன் கூறியது: என் டைரக்ஷனில் நடித்த தனுஷ், விஷால் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாகி விட்டார்கள். விமலும் தயாரிப்பாளராகியிருக்கிறார். இப்பட ஷூட்டிங்கின்போது நிறைய நடிகர்களுக்கு சரியாக வேட்டி கட்டவே தெரியவில்லை. அந்த அளவுக்கு நம் பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு பாடல் காட்சியின்போது எனக்கும் விமலுக்கும் சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டு 2 நாட்கள் பேசாமல் இருந்தோம். […]
அஜித் ரசிகர்கள் எப்பொழுதும் அவரது பெயரை வைத்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்வது வழக்கம் . இதுவரை பலருக்கு பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கும் நல்ல நாளில் உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர். அதைப்போலவே அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளுக்காக சிவகாசியில் ஆதரவற்றோருக்கு பல நல்ல காரியங்களை செய்து வந்தனர் . அவர்களுக்கு வேண்டியதை குடுத்து மிகவும் உதவினர். இதனால் அங்கு உள்ள மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தனர் என்பது கூறவேண்டியது.
நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள படம் வேலைக்காரன். இப்படம் சிவா நடிப்பில் வெளியாகி அவரது படங்களிலேயே பெரிய வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் இப்படத்தை பற்றி நடந்த சம்பவங்களை பற்றியும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘சினிமாவில் ரெட் கார்டு கலாச்சாரம் பற்றி தெரியவில்லை. ஒரு படத்தின் படபிடிப்பை நிறுத்துவதால் எப்படி பிரச்சனை சரியாகும் என தெரியவில்லை. வேலைக்காரன் படபிடிப்பு முதல் நாளன்று நிறுத்தப்பட்டது. அன்று இரவு சில தயாரிப்பாளர்கள் முன்னிலையில் கட்டபஞ்சாயத்து […]
ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததும் இதற்க்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டு இருக்குகிறது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில், கர்நாடகாவை ஒரு கன்னடன் தான் ஆளவேண்டும் என ஆக்ரோஷமாக கூறினார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த ரஜினி தமிழ்நாட்டை ஆள நினைத்து பேசுவதை ஆதரிப்பது. தமிழர்களை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராகவும், இரு நிலைபாட்டோடு இருப்பதாகவும் கூறி […]
ஜாதி, மதம் என்று பார்க்காமல் காதலில் விழுந்திருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலிக்கிறார். சமீபகாலமாக இருவரும் டேட்டிங் செய்துவருகின்றனர். சில வாரங்களுக்கு முன் கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஸ்ருதி பட்டு சேலை உடுத்தியும், ைமக்கேல் பட்டு சட்டை, பட்டு வேட்டி உடுத்தியும் பங்கேற்றனர். பின்னர் இருவரும் லண்டன் பறந்தனர்.கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் மைக்கேல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார் ஸ்ருதி. அப்போது […]
தல அஜித்குமார் தன் தொழில் நடிப்பது மட்டுமே என்று கூறி தன் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டார். ஆனாலும் அவரது படங்களுக்கு கட்டவுட் வைப்பதும் பாலாபிசேகம் செய்வதும், அவரது பிறந்த நாளான்று நலத்திட்டங்களை செய்வதும் என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை பலரின் பள்ளி படிப்புக்கு உதவுவது, ஆதரவற்றோருக்கு நல்ல உடை, சாப்பாடு வழங்குவது என செய்து வந்தனர். இந்நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்கா பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்து அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தனர். […]
பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வலைதளங்களில் பிரகாஷ் ராஜை விமர்சித்து கருத்துகள் வெளியாகின. இந்நிலையில், தனது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: “முதலில் நான் ஓர் இந்தியன். தகுதி வாய்ந்த நபராக இருந்தால், நாட்டின் எந்த ஒரு மாநிலத்திற்கும் தலைவராகலாம் […]
ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வரும் 6-ம் தேதி ரஜினிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பு நடக்க உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் வரும் 6-ம் தேதி பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பிறகு, முதல் முறையாக இருவரும் சந்தித்துப் பேச உள்ளனர். இதற்காக, ‘விஸ்வரூபம் 2’ படப் பணிகளுக்காக அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கிருந்து […]
நடிகர் ஷாருக்கான் குள்ளனாக நடிக்கும் புதிய படத்தின் டீசர் நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பு ஜீரோ என்றும் ஷாருக்கான் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தைத் தொடர்ந்து முழுநீளப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் குள்ளனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாருக்கானை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியதை அவரது ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர் …. source: www.dinasuvadu.com
இணையதளத்தில் 2018-ம் ஆண்டு அதிக லாபத்திடை பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த வருடம் மொத்தம் 171 படங்கள் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இந்த பருடம் வெளியான படங்களின் பட்டியலில் 2.0 படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடதிதில் தளபதியின் சர்க்கார் படம் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சீயான் விக்ரமின் தந்தையும்,நடிகருமான வினோத் ராஜ் இன்று மாலை திடீரென மரணமடைந்துள்ளார். 80 வயதான அவர் விஜயின் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவருக்கு சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை. இவர் இளைய தளபதி விஜயின் “கில்லி” படத்தில் நடிகையின் த்ரிஷாவிற்கு அப்பாவாக நடித்திருந்தார்.மேலும் சில முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் சிறிய சிறிய கதாப்பாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். அவரது மறைவு சினிமா துறையில் மிகப்பெரும் அதிர்ச்சியை […]
ஜனவரி 1: பிரபல பாலிவுட் நடிகர் ஓம் புரி தன்னுடைய 66வது வயதில் மாரடைப்பால் காலமானார். ஜனவரி 14: தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா,தன்னுடைய 91வது வயதில் இறந்தார். பிப்ரவரி 1: இந்திய தேசிய முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ.அகமது,தன்னுடைய 67 வயதில் காலமானார். இவர் நாடாளுமன்றத்தில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 6: “யுனெஸ்கோ கூரியர்’ தமிழ்ப் பத்திரிகை […]
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை த்ரிஷா. கமல், விஜய், அஜித் என முன்னனி நடிகர்களோடு ஜோடியாக நடித்தவர் தற்போது பெரிய படங்கள் ஏதும் தன கைவசம் இல்லாத நிலையில் சமூக சேவைகள் செய்தும், மக்களிடம் விளிப்ப்புணர்வு பிரச்சாரங்களை செய்தும் வருகிறார். இவர் அண்மையில், வட நெமிலி கிராமத்திற்கு வந்த திரிஷா, அங்குள்ள மக்களை சந்தித்து கழிவறையின் அவசியம் பற்றி சொல்லியும், கழிவறை இல்லாததால் ஏற்படும் சுகாதார கேடு பற்றியும் விளக்கி கூறினார். மேலும் […]