சினிமா

இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பாண்டியராஜன்! எல்லாத்துக்கும் காரணம் பாக்கியராஜ் தான்!

Published by
பால முருகன்

இயக்குனர் பாக்கியராஜ் எழுதி இயக்கிய பல திரைப்படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்துள்ளது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் கடந்த 1979-ஆம் ஆண்டு வெளியான ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்த திரைப்படத்தில் பாக்கியராஜுடன் சுதாகர், சுமதி, கவுண்டமணி, எஸ்.வரலட்சுமி, சிஆர் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை பகவதி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளரும், கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனருமான கங்கை அமரன் இசையமைத்திருந்தார். விதவை தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் வாழும் ஒரு ஏழைப் பெண்ணை மையாக வைத்து பாக்கியராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். நடிகராகவே நடித்து வந்த பாக்கியராஜ் இந்த திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் .

Chokka Thangam : எமோஷனலில் உருக வைத்த ‘சொக்க தங்கம்’! செட்டிமெண்ட்டை கையில் எடுத்து மொக்க வாங்கிய பாக்கியராஜ்!

இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் இது தான் முதல் படமா அவருக்கு என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு நல்ல திரைப்படத்தை மக்களுக்காக இயக்கி கொடுத்தார். இந்த நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜன் தூங்கவே இல்லயாம். காரணம் என்னவென்றால், அந்த படம் அந்த அளவிற்கு அவருக்கு பெரிய தாக்கத்தை கொடுத்ததாம்.

படத்தை பார்த்த பிறகு கண்களை மூடினாள் எதோ ஒரு தெருவில் நடந்து செல்வது போல இருந்ததாம். படத்தில் வந்த கதாபாத்திரங்கள் எல்லாம் தனக்கு பொருத்தும் வகையில் இருந்த காரணத்தால் படம் அவருக்கு அந்த சமயமே பிடித்ததாம். படத்தில் வரும் கதாபாத்திரங்களில் நடித்தவர்களுடைய வயது மற்றும் உடுத்தும் உடை என அனைத்துமே பாண்டியராஜணிற்கும்  பொருந்தியதாம்.

Aan Paavam : இளையராஜா வீட்டு வாசலில் உட்கார்ந்த பாண்டியராஜன்! ஆண்பாவம் படம் உருவான கதை!

பிறகு இந்த திரைப்படத்தை யார் இயக்கி இருந்தார் என்பதை அவர் தெரிந்துகொண்ட போது பாக்கியராஜ் என அவருக்கு தெரிந்ததாம். பிறகு படத்தை பார்த்த இரண்டு வாரங்களுக்கு பின் பாக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பும் பாண்டியராஜனுக்கு கிடைத்ததாம் ஆனால், படத்தை பற்றியும் அவரிடமும் பதட்டத்தில் பேசமுடியவில்லையாம்.

பிறகு நடிகராக கலக்கி கொண்டிருந்த பாண்டியராஜன் இயக்குனராக ஆசைப்பட்டுள்ளார். எனவே, எந்த இயக்குனரிடமாவது உதவி இயக்குனராக பணியாற்றவேண்டும் என அவர் ஆசைப்பட்ட நிலையில், பாக்கியராஜ் அவருக்கு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு வழங்கினாராம். இந்த தகவலை பாண்டியராஜனே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பாண்டியராஜன் கன்னிராசி, ஆண்பாவம், கபடி கபடி உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

5 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

6 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

6 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

7 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

7 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

8 hours ago