பின்னணி பாடகர் வேல்முருகன் கைது! காரணம் என்ன?

Published by
பால முருகன்

Velmurugan : சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில் பாடகர் வேல்முருகன் கைது. 

தமிழ் சினிமாவில் பல ஹிட் படைகளை பாடி இருக்கும் பிரபலமான பாடகர் வேல் முருகன் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக சென்று கொண்டு இருந்த சமயத்தில் அப்போது அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் இரும்பு தடுப்பு வைத்து சாலை அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த வழியாக செல்ல பாடகர் வேல் முருகன் முயற்சி செய்த நிலையில், அங்கு பணியில் இருந்த துணை மேலாளர் வடிவேலு என்பவர் இந்த பகுதியில் செல்ல முடியாது மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டி இருக்கிறது என்று கூறி கண்டித்தாராம். இதனால் பாடகர் வேல் முருகனுக்கும் அவருக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்றதாம்.

பின் ஒரு கட்டத்திற்குமேல் ஆத்திரம் அடைந்த பாடகர் வேல் முருகன் அதிகாரியை தாக்கிவிட்டு, ஆபாச வார்த்தைகளை பேசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விருகம்பாக்கம் போலீஸில் வேல் முருகன் மீது அந்த அதிகாரி புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபல பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்தனர்.

ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேல் முருகனை கைது செய்த நிலையில், விசாரணை மேற்கொண்டு இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து, எழுதி வாங்கி ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

8 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

8 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

9 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

10 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

10 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

11 hours ago