பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார். அதில், யானைக்கு பேய் பிடித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
நம்ம கோலிவுட் இயக்குனர்களிடம் இருந்து பேயை காப்பாற்ற வேண்டும் என பேய் முன்னேற்ற சங்கத்திடம் இருந்து கடிதமே வந்துவிடும் அளவிற்கு ஒரு காலத்தில் பேய் படங்கள் குவிந்து வந்தன. தற்போது வரை சுந்தர்.சி மற்றும் லாரன்ஸை தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அந்த அப்பாவி பேய்யை விட்டுவிட்டனர்.
அந்த பேய் கதையை தற்போது இன்னோர் இயக்குனர் கையில் எடுத்துள்ளார். பாடலாசிரியரும் இயக்குனருமான பா.விஜய் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்க உள்ளார்.
இந்த படம் பேய் படமாக உருவாக உள்ளது. இதுவரை, மனிதர்கள், நாய், ஈ, வாகனம் என பேய் பிடித்திருந்த காலம் போய், தற்போது, ஒரு யானை மீது பேய் பிடித்தது போல இப்பட கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரபு தேவா நடிப்பில் அடுத்ததாக பகீரா, பொன் மாணிக்கவேல் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…