sarath babu and rajinikanth [Image source : file image ]
நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சரத்பாபு உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை, தி.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் நேரில் சென்று தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று நடிகர் சரத்பாபு உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ” நான் நடிகர் ஆகும் முன்பே சரத்பாபுவை எனக்கு தெரியும். நானும் அவரும் நெருங்கிய நல்ல நண்பர்கள். அவர் ரொம்ப அருமையான மனிதர்.
அவர் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பவர். அவர் கோபம் அடைந்து நான் பார்த்ததே இல்லை. அந்த அளவிற்கு மிகவும் அமைதியானவர். என் மீது அவருக்கு அளவு கடந்த அன்பு..நான் சிகரெட் பிடித்தால் அதனை பார்த்து ரொம்பவே வருத்தப்படுவார். சிகெரட் பிடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறுவார். அவர் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது” என ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.
மேலும், மறைத்த நடிகர் சரத்பாபு ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…