Categories: சினிமா

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கான தடை நீக்கம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்குவங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டதை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.

கடந்த 5ம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி ‘ திரைப்படம் வசூலில் பல கோடிகளை அள்ளி வருகிறது. இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தவகையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஒரு சில மாநிலங்கள் வரிவிலக்கை அறிவித்திருந்தன. அதேநேரம் மேற்கு வங்கம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்கள் இந்தப் படத்திற்கு தடையும் விதித்திருந்தது. இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்குவங்க அரசு தடை விதித்ததற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட சிலர் ஒரு விஷயத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அதனை தடை செய்வீர்களா? என்றும் பிடிக்கவில்லை என்றால் பார்க்க வேண்டாம், அதை விடுத்தது அடிப்படை உரிமையை எப்படி பறிக்க முடியும் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது அந்தந்த மாநில காவல்துறையின் கடமை. படம் பார்க்க செல்வோருக்கு தேவைப்பட்டால் பாதுகாப்பு வழங்கவும் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட தடை விதித்து மேற்கு வங்க அரசு மே 8-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் தொடக்கத்தில் இந்தப் படம் திரையிடப்பட்ட போதிலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட நிறுத்துவதாகத் தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் கடந்த மே 7ம் தேதி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

53 seconds ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

3 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago