சினிமா

மீண்டும் கவர்ச்சி குத்தாட்டம் போட ரெடியான சமந்தா! எந்த படத்துக்காக தெரியுமா?

Published by
பால முருகன்

நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஓ சொல்றியா மாமா’ பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் மிகவும் ட்ரெண்டாகிவிட்டார் என்று கூறலாம் . அவருக்கு ஏற்கனவே இருந்த மார்க்கெட்டை சற்று உயர செய்ததும் அந்த பாடல் தான். அந்த அளவிற்கு அந்த பாடலில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

அந்த பாடலைத் தொடர்ந்து அதே போன்று மீண்டும் ஒரு நல்ல குத்து பாடலில் சமந்தா நடனமாடுவாரா என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், தற்போது அவர்களுக்காகவே ஒரு கொண்டாட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால், தற்போது நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் அதே போல ஒரு கவர்ச்சி பாடலில் நடனம் ஆட இருக்கிறாராம் .

புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டாவது பாகத்தில்  ‘ஓ சொல்றியா மாமா’  பாடலைப் போல ஒரு குத்துப் பாடலை இசையமைப்பாளர் தேவி  ஸ்ரீ பிரசாத் இசையமைத்து கொடுத்து இருக்கிறாராம். அந்த பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாட பட குழு பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாம்.

சமந்தாவுக்கு நோய்வர நீங்க தான் காரணம்! விஜய் தேவரகொண்டாவிடம் வம்பிழுத்த பிரபல நடிகர்?

ஆனால், இறுதியாக இந்த பாடலிலும் சமந்தாவே நடனமாட வைத்தால் கண்டிப்பாக அந்த பாடலைப் போல இந்த பாடலும் வெற்றி பெறும் என திட்டமிட்டு அவரிடம் இந்த கவர்ச்சியான பாடலில் நடனம் ஆடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். எனவே, அதற்கு சமந்தா கண்டிப்பாக சம்மதம் மட்டும் தெரிவித்துவிட்டால் முதல் பக்கத்தில் இடம் பெற்று இருந்த ‘ஓ சொல்றியா மாமா’  பாடலைப் போல ஒரு கவர்ச்சி  பாடல் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. எனவே, சமந்தா பாடலில் நடனம் ஆடுவார் இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். மேலும், நடிகை சமந்தா கடைசியாக குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா சிட்டால் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதனை தவிர சில படங்களில் நடிக்க கதை கேட்டும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு.., தமிழ்நாடு அரசு உதவி அறிவிப்பு.!

சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…

13 minutes ago

பழனிசாமி, அண்ணாமலை குறித்த பேச்சு: “அரசியல் வாழ்வில் இது எனக்கு ஒரு பாடம்” – வருத்தம் தெரிவித்தார் ஆதவ் அர்ஜூனா.!

சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…

41 minutes ago

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 27 தீர்மானங்கள்.! என்னென்ன?

சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…

1 hour ago

‘தேர்தலை ஒட்டியதே அரசியல்’.., ராஜ்யசபா சீட் வழங்காதது குறித்து பிரேமலதா சொன்ன கருத்து.!

சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…

1 hour ago

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் அறிவிப்பு.., தேமுதிகவுக்கு ’நோ’ சொல்லிய அதிமுக.!

சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…

2 hours ago

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

18 hours ago