என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

ஹர்திக் உடன் அன்பு மட்டுமே இணையத்தில் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள் என கில் கூறியுள்ளார்.

hardik pandya vs gill

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த ஒரு விஷயம் தான் நேற்றிலிருந்து ஹாட் டாப்பிக்கான ஒரு விஷயமாக மாறியுள்ளது. நேற்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் போடும்போது ஹர்திக் பாண்டியா மற்றும் சுப்மன் கில் இருவரும் கைகூட குலுக்கிக்கொள்ளவில்லை. கில் கைகொடுக்காமல் சென்றபோது ஹர்திக் பாண்டியா அவரை பார்த்த விதமும் அதற்கு அடுத்ததாக போட்டியில் கில் விக்கெட் ஆனபிறகு அவருடைய கிட்ட சென்று பாண்டியா கத்தி சத்தம் போட்டுக்கொன்ற வீடியோவும் தீ போல வைரலானது.

எனவே, இந்த இரண்டு வீடியோவையும் பலரும் சேர்த்து எடிட் செய்து இருவருக்கும் இடையே ஈகோ அதிகமாகிவிட்டது அதனால் தான் இப்படி இருக்கிறார்கள் என்பது போலவும், ஒரு பக்கம் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன்சி கொடுத்த காரணத்தால் ஹர்திக் விரக்தியில் இப்படி நடந்துகொள்கிறார் எனவும் பேச்சுக்கள் பெரிதாக போய்க்கொண்டு இருந்தது.

இப்படியான சூழலில், இதெல்லாம் பொய் நாங்கள் நண்பர்கள் என்பது போல இரண்டுபேரும் சமூக வலைத்தளங்களில் அன்பை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள். கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் உடன் அன்பு மட்டுமே.. இணையத்தில் பார்க்கும் அனைத்தையும் நம்பாதீர்கள் என கூறினார். அந்த பதிவை பார்த்த உடனே ஹர்திக் பாண்டியா ஆல்வ்ஸ், சுப்மன் கில் குழந்தை எனவே அன்போடு பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்