முக்கியச் செய்திகள்

தீவிரமாக பெண்ணை காதலித்தேன்! குறுக்க ஷாருக்கான் வந்துட்டாரு..உண்மையை உடைத்த விஜய்சேதுபதி!

Published by
பால முருகன்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ஷாருக்கான், அட்லீ, அனிருத், விஜய்சேதுபதி, என அனைவரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய விஜய்சேதுபதி ” ஷாருக்கான் சாருடன் நடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த அனைவர்க்கும் நன்றி. நான் முன்னாடி ஒரு பொண்ணை காதலித்தேன். அந்த பெண்ணிடம் என்னுடைய காதலை சொன்னேன்.

அதற்கு அந்த பொண்ணு நான் ஷாருக்கானை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டது. அதற்கு பழி வாங்கவேண்டும் என்று நினைத்தேன் பழிவாங்க இத்தனை வருடங்கள் ஆகிவிட்டது” என மிகவும் நக்கலாக விஜய் சேதுபதி பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய விஜய்சேதுபதி ” முக்கியமாக நான் யோகி பாபுவை பற்றி பேச விரும்பிகிறேன். அவர் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை கேட்டவுடன்.

சம்மதம் தெரிவித்துவிட்டு பாத்துக்கலாம் என்று சொல்வார். பிறகு அவருடைய நடிப்பை பார்த்து நான் மிரண்டு போய்விட்டேன். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை தனக்குள் எடுத்துக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார். அதை படப்பிடிப்பு தளத்தில் இருந்து பார்த்த எனக்கு தான் தெரியும்” என யோகிபாபுவை விஜய்சேதுபதி புகழ்ந்து பேசினார்.

மேலும், அவரை தொடர்ந்து பேசிய படத்தின் எடிட்டர் ரூபன் “ஜவான் திரைப்படத்தில் விஜய்சேதுபதி கொடூரமான வில்லனாகவும், நயன்தாரா ஆக்‌ஷன் ஹீரோயினாகவும் பணியாற்றியுள்ளனர். படத்தை பார்க்கும்போது விஜய்சேதுபதியை பார்த்து நான் மிரண்டு போய்விட்டேன்” என கூறிள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

10 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

10 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

11 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

12 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

13 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

13 hours ago