சினிமா

இழுத்தடித்த சிம்பு – சுதா கொங்கரா! கடுப்பாகி கழட்டிவிட்ட தயாரிப்பு நிறுவனம்?

Published by
பால முருகன்

இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிம்பு இருவரும் ஒரு திரைப்படத்தின் மூலம் இணையவிருந்தார்கள். இவர்கள் இருவரும் இணையும் அந்த திரைப்படத்தினை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவிருந்ததாம். இந்த தகவல் கடந்த ஆண்டிலிருந்தே பரவி வந்த நிலையில், இன்னும் இந்த படத்துக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை.

படத்தின் அறிவிப்பு கூட வெளியாவத நிலையில் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிம்பு இருவரும் இணையும் படம் நடக்குமா என கோலிவுட் வட்டாரத்தில் கேள்வி எழும்பியது. இதனையடுத்து, தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், இவர்கள் இருவரும் இணையவுள்ள படத்தில் இருந்து தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே பிலிம்ஸ் விலகி விட்டதாம்.

ஏனென்றால், நடிகர் சிம்பு அடுத்ததாக அவருடைய 48-வது படம் அதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்க தொடர்ச்சியாக நடிக்க கமிட் ஆகிவிட்டாராம். அதைப்போல, சுதா கொங்கராவும் சூர்யாவின் 43-வது திரைப்படத்தை இயக்க கமிட் ஆகி இருக்கிறார். எனவே, அவரும் தொடர்ச்சியாக அடுத்ததடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக அவர் சிம்புவை வைத்து இயக்கவுள்ள படத்தின் வேலைகளில் ஈடுபடமுடியவில்லை. தயாரிப்பு நிறுவனம் கேட்டாலும் அப்போது பண்ணலாம் இப்போது பண்ணலாம் என சிம்பு மற்றும் சுதா இருவரும் இழுத்தடித்தார்களாம்.

இதனால் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் சிம்புவும் சுதா கொங்கராவும் மாற்றி மாற்றி படங்களில் கமிட் ஆகி வருவதன் காரணமாக இவர்கள் இருவரும் இணையும் இந்த படத்தினை நாங்கள் தயாரிக்கவில்லை என கூறி படத்தில் இருந்து விலகி விட்டார்களாம். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் போல ஒரு பெரிய நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க முதலில் முன் வந்துள்ளது என்றால் கண்டிப்பாக படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள படமாக தெரிகிறது.

எனவே, தற்போது சற்று கடுப்பாகி ஹோம்பலே பிலிம்ஸ்  நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி உள்ள காரணத்தால் இந்த படங்கள் நடக்குமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. மேலும், சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago