சூரி நடிப்பை பார்த்து மிரண்ட சிவகார்த்திகேயன்! கொட்டுக்காளி பார்த்து சொன்ன விஷயம்?

Published by
பால முருகன்

சென்னை : கொட்டுக்காளி படத்தினை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்குக் கால் செய்து பாராட்டிப் பேசியுள்ளார்.

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ‘கொட்டுக்காளி’ படத்தினை பார்த்து விட்டு சிவகார்த்திகேயன் அவரிடம் கூறிய விஷயத்தை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்துப் பேசிய சூரி ” சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நான் ஒரு படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எனக்கு ஆரம்பத்தில் நல்ல நண்பராக இருந்தார். அதன்பிறகு அண்ணன் -தம்பியாக மாறினோம். என்னுடைய தம்பி தயாரிப்பில் நான் ஒரு படத்தில் நடித்தேன் என்பது மிகவும் பெருமையான விஷயம்” எனவும் நெகிழ்ச்சியாகப் பேசினார் சூரி.

தொடர்ந்து பேசிய சூரி ” தம்பி சிவகார்த்திகேயன் ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்துவிட்டு எனக்குக் கால் செய்து “என்ன அண்ணா இப்படி நடிச்சிருக்கீங்க? படத்தில் உங்களுடைய நடிப்பைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. அண்ணா இவ்வளவு நடிப்பு உங்களுக்குள் இருக்கிறதா? ” என சிவகார்த்திகேயன் அசந்து போய் கேட்டதாகவும் சூரி கூறினார்.

சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல் அவருடைய குடும்பமும் படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய நடிப்பைப் பாராட்டியதாக சூரி கூறினார். அதனைப் பற்றிய பேசிய அவர் ” சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி என்ன அண்ணா இப்படி வேறு மாதிரி நடிச்சிருக்கீங்க? படம் நன்றாக இருக்கிறது” என பாராட்டியதாகச் சூரி நெகிழ்ச்சியாகப் பேசினார்.

அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் சூரியின் நடிப்பைப் பார்த்து வியந்து ” இப்படி ஒரு பெரிய நடிகர் தோதாத்திரியைத் தான் நான் கலாய்த்துக் கொண்டு இருந்தேனா? இப்படியான நடிப்பை வைத்துக்கொண்டா என்னிடம் நீங்கள் நடித்தீர்கள்? படத்தில் உங்களுடைய நடிப்பு மிகவும் அருமை” எனப் பாராட்டியதாகவும் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக அந்த பேட்டியில் தெரிவித்தார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ள  ‘கொட்டுக்காளி’ படத்தினை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 minutes ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

25 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

10 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

10 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago