Categories: சினிமா

சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு! யாரெல்லம் இருக்காங்க தெரியுமா?

Published by
கெளதம்

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கராவும் நடிகர் சூர்யாவும் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர்.

தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 43வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷின் 100 வது திரைப்படமாகும்.

மேலும், இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிவிப்பதற்காக ப்ரோமோ வீடியோ போல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. ஆனால், அதன் படத்தின் முழுப்பெயரை வெளியிடாமல் வீடியோவை முடித்து சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளது.

எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!

நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காம இருந்து வந்த நடிகை நஸ்ரியா இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் சூரிய மற்றும் துல்கர் சல்மான் நண்பனாக நடிக்க பாலிவுட் ஹீரோ விஜய் வர்மா வில்லனாக நடிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

பாக்கியராஜ் திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த ‘கிஃப்ட்’! நெகிழ்ந்து போன பூர்ணிமா!

மேலும் தற்போதைய வதந்திகளின்படி, இப்படம் 1990க்கு முன்னாடி தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை முன்வைத்து இப்படத்தின் கதை உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago