அரசியல் கதையில் மிரட்ட போகும் எச்.வினோத்! ‘தளபதி 69’ லேட்டஸ்ட் தகவல்!!

Published by
பால முருகன்

Thalapathy 69 : தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் படம் அரசியல் கதையம்சம் கொண்ட படம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இது விஜயின் 68 -வது படம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் தனது 69 -வது படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார்.

எனவே, கடைசி படம் தரமாக இருக்கவேண்டும் என்று அவரும் அவருடைய ரசிகர்களும் ஆசைப்பட்டு யார் இயக்குனர் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட விஜயின் 69-வது படத்தை இயக்குவது தீரன், வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத் தான் என்பது உறுதியாகிவிட்டது என்றே சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எச்.வினோத் விஜய்யை வைத்து இயக்கும் படம் எந்த மாதிரி கதையம்சத்தை கொண்ட படம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தளபதி 69 படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்ட படமாக எடுக்கப்படவுள்ளதாம். தற்போது படத்தின் கதையை மெருகேற்றும் பணியில் தான் எச்.வினோத் திவீரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

எச்.வினோத் ஏற்கனவே கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார். ஆனால், தற்போது கமல்ஹாசன் தக்லைஃப் படத்தில் நடித்து வருவதால் அதற்குள் நாம் ஒரு படத்தை இயக்கி முடித்துவிடலாம் என்று எச்,வினோத் திட்டமிட்டு விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் கோட் படத்தில் நடித்து முடித்து படம் வெளியான பிறகு தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

11 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

54 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago