[file image]
Lollu Sabha Seshu: ‘அய்யய்யோ அவரா பயங்கரமான ஆளாச்சே’ என்ற வசனத்துக்கு சொந்தக்காரரான நகைச்சுவை நடிகர் சேசு, கடந்த 26ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
சமீபகாலமாக திரையுலக பிரபலங்கள் பலருக்கு மாரடைப்பு வருவது தொடர் கதையாகி வருகிறது. உணவு, தூக்கத்தை மறந்து படப்பிடிப்பில் பங்கேற்பதால் இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பால் சில நடிகர்கள் மறைந்தனர், அதன் வரிசையில் இப்பொழுது நகைச்சுவை நடிகர் சேசுவும் நம்மை விட்டு சென்றுவிட்டார். விஜய் டிவி-ன் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் சேசு, நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், அண்மை காலமாக நடிகர் சந்தானத்தின் திரைப்படங்களில் வரும் நகைச்சுவை காட்சிகள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். இவர் கடைசியாக சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார்.
60 வயதான நடிகர் சேசுவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மறைந்தார். இவரது மறைவு தமிழ் சினிமாவில் சோகத்தில் ஆழ்த்தியது. சேசு இருப்பதற்கு முன், அவர் மருத்துவமனையில் இருக்கும்பொழுது சில பிரபலங்கள் அவருக்காக பண உதவி கேட்டு வீடியோக்கள் வெளியிட்டு இருந்தனர்.
இவ்வாறு உயிருக்கு போராடி வந்த சேசுவுக்கு பிரபல நடிகர் ஒருவர் google pay -ல் வெறும் 500 ரூபாய் அனுப்பிருக்கிறார். இது தெரிந்து கொந்தளித்து பேசிய சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, இது தான் ஒரு மனிதரோட மதிப்பு…பணம் என்று கேட்டு போனால் இப்படி தான் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…