சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் நடித்து வரும் கோட் படம் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான விற்பனை வியாபாரங்களும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் கோட் படத்தின் திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடி கொடுத்து வாங்கியதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், இந்த படத்தை ஓடிடியில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்னதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தும்போது 150 கோடி வேண்டும் என கேட்டார்களாம். அதற்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி எல்லாம் கொடுக்கவே முடியாது ரொம்பவே அதிகமான தொகையை கேட்கிறீர்கள் என்பது போல கூறினார்களாம்.
இதனால் கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வேறு எந்த ஓடிடி நிறுவனமாவது வாங்கிக்கிறதா என பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியாதாம். ஆனால், எந்த நிறுவனமும் கோட் படத்தை வாங்க முன்வரவில்லையாம். இறுதியாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாம். அப்போது தான் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி எல்லாம் முடியாது 125 கோடி என்றால் ஓகே படத்தை வாங்கி கொள்கிறோம் என்று கூறியதாம். எனவே, படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகவும் யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…