mgrsaroja devi [file image]
Saroja Devi : எம்ஜிஆரின் ஹிட் படம் ஒன்றில் நடிக்க சரோஜாதேவி மறுப்பு தெரிவித்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த காலகட்டத்தில் அவருடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. அந்த வகையில் எம்.ஜி.ஆருடன் எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னன், நாடோடி மன்னன், படகோட்டி, நான் ஆணையிட்டால், பாசம், ஆசை முகம் இன்னும் சில படங்களும் நடித்து இருக்கிறார்.
அந்த சமயம் இவர்களுடைய ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த காரணத்தால் எம்.ஜி ஆர் வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களே படத்தில் சரோஜாதேவியை புக் செய்துவிடுவார்களாம். இதன் காரணமாகத்தான் தொடர்ச்சியாக எம் ஜி ஆர் படங்களில் சரோஜா தேவியும் நடித்துக் கொண்டிருந்தாராம்.
தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் எல்லாம் சரோஜாதேவியை போட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கூறியதாகவும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எம்ஜிஆர் உடைய மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்றான வேட்டைக்காரன் படத்தில் சரோஜாதேவி நடிக்காதது அந்த சமயமே ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது . எந்த காரணத்துக்காக வேட்டைக்காரன் படத்தில் சரோஜாதேவி நடிக்கவில்லை என்ற காரணம் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரோஜாதேவி இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய சரோஜாதேவி ” அந்த படத்தில் நடிக்க முதலில் எனக்கு தான் வாய்ப்பு வந்தது. ஆனால், அங்கு இருந்தவர்கள் உடனே எல்லா படத்திலையும் அவரையே போடாதீங்க என்று கூறினார்கள். ஒரு சிலர் சாவித்திரியை நடிக்க வையுங்கள் என்று கூறினார்கள். உடனே நானே சொன்னேன். ஆமாம் எனக்கு பதிலாக அவரை நடிக்க சொல்லுங்கள் எத்தனை முறை நானே நடிக்க என்று தான் அந்த படத்தில் நடிக்க மறுத்தேன்” எனவும் நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…