சமந்தா மாமனாரின் வீட்டில் எலும்பு கூடு! உண்மையின் பின்னணி என்ன?

Published by
லீனா

நடிகர் நாகார்ஜுனா பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் விக்ரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவருக்கு, தெலுங்கானாவில் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிக்குடா கிராமத்தில், 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்று உள்ளது.

இந்த பகுதியில் விவசாய பணிக்காக சென்றவர்கள், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்களும் போலிஸாருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் விரைந்து அங்கிருந்த பழைய ரூம் ஒன்றில் இருந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு கிடந்த ஆதார்கார்ட்டை வைத்து பார்க்கையில், அக்கிராமத்தை சேர்ந்த சக்காலி என்பவரது உடல் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டு, அவர் வீட்டை விட்டு சென்றுவிட்டதாகவும், சகோதரரின் இறப்பு காரணமாக கவலையில் இருந்த அவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். அவர் எங்கு தற்கொலை செய்தார் என்ற விவரம் தங்களுக்கு தெரியாது என்றும், அதானால் அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த கிராம்மாது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

57 seconds ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

27 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

11 hours ago