சூர்யாவின் 41-வது படத்திற்கான கதை இதுதானா.? தீயாக பரவும் புதிய தகவல்.!

Published by
பால முருகன்

சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார், நந்தா பிதாமகன் ஆகிய படங்களை தொடர்ந்து இருவரும் 18-ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா & ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது, அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், சூர்யா -பாலா இணையும் இந்த படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படவுள்ளதாம்.

இதற்கு முன்பு பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, பரதேசி, நான் கடவுள் போன்ற படங்கள் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். நந்தா பிதாமகன் படத்தை தொடர்ந்து சூர்யா -பாலா இணைந்துள்ளதால் இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார். தமிழில் இவருக்கு முதல் திரைப்படம் இது. படத்தில் ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் பணியாற்றுகிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

32 minutes ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

34 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

1 hour ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

14 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

15 hours ago