kiran rathod [file image]
தமிழ் சினிமாவில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கிரண் ரத்தோட் . முன்னணி நடிகையாக வளர்ந்து வரவேண்டிய எல்லா வாய்ப்புக்கும் கிரணுக்கு வரும் என அந்த சமயமே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம்.
எனவே, பட வாய்ப்புகள் வராத காரணத்தால் நடிகை கிரண் வீட்டிலேயே இருந்தார். இதன் காரணமாக அவருக்கு உடல் எடையையும் பருமன் ஆனது. இதன் பிறகு பட வாய்ப்புகள் வரவில்லை என்பதால் கவர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் கிரண் வெளியீட்டு வந்தார். அப்படி இருந்தும் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம்.
இதன் காரணமாக, கிரண் ஆப் ஒன்றை தொடங்கி அதில் தன்னிடம் வீடியோ கால் பேசவேண்டும் என்றால் இவ்வளவு பணம் வேண்டும். நேரில் தன்னை பார்க்கவேண்டும் என்றால் இதனை ரூபாய் என தொடங்கினார். இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது. பட வாய்ப்பு இல்லை என்றால் இப்படியா பண்ணுவீங்க என்பது போல தங்களுடைய விமர்சனங்களை கொட்டி தீர்த்தனர்.
இந்த நிலையில், நடிகை கிரணுக்கு சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி ஒப்பந்தம் செய்த அன்று இரவே படுக்கைக்கு அழைத்துள்ளார்களாம். தமிழில் அறிமுகமான நடிகை கிரண் இங்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் ஹிந்தி பக்கம் சென்றாராம்.
ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னையை விட்டு விட்டு நடிகை கிரண் மும்பை சென்றாராம். அப்போது ஹிந்தியில் கிரனை நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தங்களுடைய படங்களிலுமே ஒப்பந்தம் செய்தார்களாம். ஒப்பந்தம் செய்தவுடன் உற்சாகமாக இருந்த கிரணுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அன்று இரவே அவர்கள் கிரணை படுக்கைக்கு அழைத்தார்களாம்.
இப்படி அழைத்தவுடன் நடிகை கிரண் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளனராம். பிறகு அங்கும் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் தமிழில் பட வாய்ப்புக்காக சென்னைக்கு திரும்பி வந்துவிட்டாராம். இந்த தகவலை கிரண் கூறியதாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…