கல்யாணத்துக்கு அப்புறம் சினிமாவை விட்டு விலக காரணம் இது தான் – ஸ்ரீதேவி விஜயகுமார்!

Published by
பால முருகன்

Sridevi Vijaykumar  நடிகையும், நடிகர் விஜயகுமாரின் மகளுமான ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழ் சினிமாவில் சிறிய வயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இருப்பினும் ஹீரோயினாக இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது என்றே சொல்லவேண்டும். அந்த வகையில்,  பிரியமான தோழி, தித்திக்குதே, நின்னே இஷ்டப்பட்டனு, தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

இவர் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த காலத்தில் அதாவது கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  திருமணத்திற்கு பிறகு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றே சொல்லலாம். திருமனத்திற்கு பிறகு வீரா எனும் தெலுங்கு படத்திலும் , லக்ஷ்மணா கன்னட படத்திலும்  மட்டுமே நடித்து இருந்தார்.

பிறகு அப்படியே சினிமாவை விட்டு விலகி தனது குடும்ப வாழ்க்கையை பார்த்துக்கொண்டார்.  இந்நிலையில், நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் படங்களில் இருந்து விலகி இருப்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய ” திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று என்னை யாரும் கூறவில்லை. ஆனால் என் கணவர் என்னை சினிமாவில் நடிக்க  சொன்னார்.

உனக்கு நல்ல திறமை இருக்கிறது நீ நடிக்கும் கதாபாத்திரம் நன்றாக இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நீ திரும்பவும் நடிக்கலாம். திருமணத்திற்குப் பிறகு நான் ஒரு பதிய வாழ்க்கையைத் தொடங்குவது கட்டாயமான ஒன்று. எனவே, அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு  பழக சிறிது நேரம் பிடித்தது.

கிட்டத்தட்ட எனக்கு ஒரு ஐந்து வயதில் சினிமாவுக்கு வந்தேன். அந்த சமயம் எல்லாம் நான் சினிமாவை விட்டு விலகி இருந்தது இல்லை.  திருமணத்திற்குப் பிறகு எனக்கே தெரியாமல் எதிர்பாராதவிதமாக  இடைவெளி ஏற்பட்டது. மீண்டும் கண்டிப்பாக நடிப்பேன் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துகொண்டு வருகிறேன்” எனவும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

3 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

21 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

29 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

54 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

2 hours ago