அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகர் விவேக் காமெடியில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் ஆவார்.இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார்.இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபடும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்த வகையில் நாளை இந்தியாவின் ஏவுகணை நாயகன் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
இதனால் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,நாளை அக்15 பாரத ரத்னா கலாம் ஐயா பிறந்த நாளை ஒட்டி அனைத்து தலைவர்/தளபதி/தல ( நாம் அன்புடன் வைத்த செல்லப் பெயர்கள்) ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அதை சமூக தளங்களில் பதிவு செய்து trend செய்ய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.இவரது கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் தற்போது #plantforkalam என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…