இப்போ வரை சினிமாவில் இருக்க இது தான் காரணம்! மனம் திறந்த வேதிகா!

Published by
பால முருகன்

வேதிகா : தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்த நடிகைகள் எல்லாம் இன்றய காலத்திலும் ரசிகர்கள் மனதில் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் என்று சொல்லலாம். இருப்பினும், 90ஸ் காலகட்டத்தில் குறைவான படங்களில் நடித்து கலக்கி வந்த வேதிகா இன்று வரை அப்படியே ரசிகர்கள் மனதிலும், நிஜத்தில் இளமையாகவும் இருந்து வருகிறார். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் தாக்குப்பிடித்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது வெளிப்படுத்தியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய நடிகை வேதிகா ” தென்னிந்திய மொழிகள் எனக்கு எதுவும் தெரியாது. மற்றவர்களை போல எனக்கு சகஜமாக பேச வரவே வராது. அப்படி பேச கொஞ்சம் தடுமாறுவேன். இருந்தாலும், தென்னிந்திய சினிமாவில் இன்று வரை தாக்குபிடித்து வருவதை நினைத்து பெருமைபடுகிறேன்.

எனக்கு கொடுக்கப்படும் வேலைகளை மிகவும் ஆர்வத்துடன் செய்து வருகிறேன். தென்னிந்திய படங்களில் நடிக்கும்போது அந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு இயக்குனரிடம் பேசி நான் பேசவேண்டிய வசன பேப்பர்களை வாங்கிவிடுவேன். அப்போது தான் நான் தயக்கம் இல்லாமல் பேச சரியாகவும் இருக்கும்.

எனக்குள் இருக்கும் இது போன்ற திறமைகள் தான் தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நான் நடிக்க கை கொடுத்து வருவதாக நினைக்கிறன்” எனவும் நடிகை வேதிகா பேசியுள்ளார். மேலும். நடிகை வேதிகா தற்போது, பிரபு தேவாவுக்கு ஜோடியாக பேட்டராப் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

16 minutes ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

1 hour ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

1 hour ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

2 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

3 hours ago

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

4 hours ago