விஜய் சேதுபதியும், விக்ரமும் இணைந்து புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஒரு மலையாள இயக்குனர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் (இரண்டு & மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது) அவ்வப்போது வெளியாகும். அந்த வழக்கம் தற்போது அதிகமாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் என்ட்ரி தான்.
பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என பாரபட்சம் பார்க்காமல் நடித்து அந்த குறையை தீர்த்தவர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் பேட்ட, விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் என வரிசைகட்டி உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்தடுத்து புதிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், சீயான் விக்ரமும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறதாம்.
இந்த படத்தை ஒரு மலையாள இயக்குனர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும்…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில்…
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு…
சென்னை : தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பாஜகவிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனத்…