Vishnu Vishal [File Image]
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்குப் பிறகு, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
இதற்கான காசோலையை விஷ்ணு விஷால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதை உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, சென்னை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களில் ஒருவராக விஷ்ணு விஷாலும் அந்த வலியை அனுப வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது வீட்டுப் பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் தான் சிக்கி தவிப்பதாக தனது X தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அவர் இவ்வாறு சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, தமிழக அரசு அலர்ட் செய்திருந்த மீட்பு பணியாளர்கள் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டனர். அவருடன் பாலிவுட் நடிகர் அமீர்கானும் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
10 நிமிட குறும்படம் இருக்கு! அது தான் LCU-வின் தொடக்கம்- நடிகர் நரேன்!
மீட்புப் பணியைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் மீட்பு பணிக்கு உதவிய தமிழக அரசு குறித்தும் , அந்த நேரத்தில் தனக்கு உதவிய நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, தமிழ் சினிமா நடிகர்கள் சூர்யா, ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் மற்றும் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் என சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நிதியுதவி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…