இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களின் அட்டகாசம் தாங்க முடியாது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள ரம்பா திரையரங்கம், எங்கள் தியேட்டரில் பிகில் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என்று விநியோகஸ்தர்களிடம் அடித்து சொல்லியுள்ளனர். மேலும் நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படத்தை வெளியிட போவதாக கூறியுள்ளனர்.
இதற்கான காரணத்தை அவர்கள் கூறுகையில், திருச்சி நகரில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், பிகில் படம் வெளியாகிறது. அதனால் தியேட்டர்களோடு போட்டி போட்டு, ஒரே படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் நிர்வாகம் விரும்பவில்லை. அதனால், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாகும் கைதி திரைப்படத்தை வெளியிட உள்ளோம் என கூறியுள்ளனர்.
மேலும், நடிகர் விஜய் அல்லது அஜித் படம் வெளியானால், அவரது ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் தானாக முடியவில்லை என்றும், இதனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றும், தியேட்டரில் உள்ள இருக்கைகளை சேதப்படுத்தி விடுகின்றனர் என்றும் கூறியுள்ளனர். இவற்றை சரிசெய்ய தியேட்டர் நிர்வாகம் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனாலேயே விஜய், அஜித் படங்களை தருகிறோம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…