சினிமா

நீங்க பாக்குறது வேற காமிக்கிறது வேற! ‘பிக் பாஸ்” குறித்து உண்மையை உளறிய விஜய் வர்மா!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் விஜய் வர்மா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் வாரத்தில் கேப்டனாகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு இவர் விளையாடிய விதம் மக்களுக்கு பிடித்து போக அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமும் உருவானது. இருப்பினும் 3-வது வாரம் அவர் மிகவும் கடுமையாக போட்டியை விளையாடாமல் மற்றவர்களுக்கு அடி படுவது போல விளையாடியதாக விமர்சனங்கள் எழுந்தது.

குறிப்பாக ஒரு டாஸ்கின் போது விஜய் பிரதீப்பை தூக்கி கீழே அடித்துவிட்டு விளையாடினார். இதன் காரணமாக அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் 3-வது வாரமே நாமேசனின் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு எலிமினேட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் அவருக்கு வரவேற்பு வேறு மாதிரி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

குறிப்பாக வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் விஜய் வர்மாவுக்கு மிரியம் மா எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அவருக்கு அழைப்புகொடுக்கப்பட்டுள்ளது அவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியால் தனக்கு கிடைத்த வரவேற்பை பெற்று பேசியும் இருந்தார்.

அதனை தொடர்ந்து கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஜய் ” பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் இவ்வளவு சீக்கிரமாக வெளியேறுவேன் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதே சமயம் நான் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எனக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த அளவிற்கு எனக்கு மக்கள் ஆதாரவு கொடுப்பார்கள் என்று  நினைக்கவில்லை.

மக்கள் எனக்கு இப்படி ஆதரவு கொடுத்ததற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். நான் பிக் பாஸ் வீட்டை விட்டு சீக்கிரமாகவே வெளிய வந்ததை நினைத்து சற்று வருத்தமாக இருக்கிறேன். நான் இவ்வளவு விரைவாக வெளியேறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கிறது.

ஆனால், வெளிய வந்து பார்த்தால் அது வேறுமாதிரி காட்டப்பட்டு வருகிறது. நிறைய காட்சிகள் கட் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தான் அங்கு என்ன நடக்கிறது என்று ரசிகர்களுக்கு முழுவதுமாக தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் நான் வேறு மாதிரி விளையாடுவேன்” எனவும் விஜய் வர்மா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

7 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

11 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

12 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

14 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

14 hours ago