Naga Chaitanya and Samantha [Image source : file image ]
நடிகர் நாக சைதன்யா தற்போது தனது கஸ்டடி படத்தின் புரமோஷன்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்தில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவி சமந்தாவுடன் எதற்காக விவாகரத்து ஆனது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நாக சைதன்யா “நாங்கள் இருவரும் பிரிந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது, நாங்கள் முறையாக விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிறது. சமந்தாவுடன் வாழ்ந்த அந்த நாட்களை நான் மிகவும் மதிக்கிறேன். அந்த நாட்களுக்கு தனி மரியாதை உண்டு.
சமந்தா ஒரு நல்ல பெண், சமூக வலைதளத்தில் வந்த வதந்தியால் தான் எங்களிடையே பிரச்னை முதலில் உண்டானது. நான் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதன்பின் மொத்தமாக சூழல் மாறிவிட்டது. ஆரம்பத்தில் சின்ன சின்ன பிரச்னையாக இருந்தது இறுதியில் பெரிதாகி, கடைசியில் பிரிய வேண்டியதாகிவிட்டது” என கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். மேலும், நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…