சினிமா

அந்த உறவை எதற்கு மறைக்கணும்..? பிரியா பவானி ஷங்கர் அதிரடி.!

Published by
பால முருகன்

நடிகை பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் ராஜேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இதனை பிரியா பவானி ஷங்கரே பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்ததும் உண்டு. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட புதியதாக வீடு கட்டிக்கொண்டு அதற்கான புகைப்படத்தையும், தனது காதலருடைய புகைப்படத்தையும் வெளியீட்டு இருந்தார்.

PriyaBhavaniShankar [Image Source : Twitter /@kollywoodnow]

இந்நிலையில், பொதுவாவாக சினிமாத்துறையில் இருக்கும் சில நடிகைகள் தங்களுடைய காதலர்களை பற்றி கூறமாட்டார்கள். ஆனால் பிரியா பவானி ஷங்கர் அதனை ரகசியமாக வைத்துக்கொள்ளாமல்  வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்பதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

priya bhavani shankar lover [Image Source :file image]

இது குறித்து பேசிய அவர் ” காதல் உறவை எதற்காக மறைக்கவேண்டும். நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருந்து காதலிக்கிறேன். இங்க யாரும் காதலிக்காமல் இல்லை. காதல் என்பது யாரும் பண்ணகூடாத விஷயமா..? இங்கு எல்லாரும் காதல் செய்கிறார்கள்.

priya bhavani shankar lover [Image Source :file image]

4-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு கூட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஒன்னும் திடீர் என்று புகைப்படங்களை வெளியிடவில்லை. ஏன்னுடைய வேலை இப்போது மாறிவிட்டது. அதனால் நான் புகைப்படங்களை வெளியிடமாட்டேன் என அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து காதல் செய்கிறேன். அது அப்படியே தொடர்ந்து கொண்டு  இருக்கிறது. அதில் ஒன்னும் தப்பு இல்லை” என அதிரடியாக கூறியுள்ளார்.

PriyaBhavaniShankar [Image Source : Twitter @PBSFansWorld]
மேலும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொம்மை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

5 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

5 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

5 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

6 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

6 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

7 hours ago