சினிமா

அந்த உறவை எதற்கு மறைக்கணும்..? பிரியா பவானி ஷங்கர் அதிரடி.!

Published by
பால முருகன்

நடிகை பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் ராஜேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இதனை பிரியா பவானி ஷங்கரே பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்ததும் உண்டு. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட புதியதாக வீடு கட்டிக்கொண்டு அதற்கான புகைப்படத்தையும், தனது காதலருடைய புகைப்படத்தையும் வெளியீட்டு இருந்தார்.

PriyaBhavaniShankar [Image Source : Twitter /@kollywoodnow]

இந்நிலையில், பொதுவாவாக சினிமாத்துறையில் இருக்கும் சில நடிகைகள் தங்களுடைய காதலர்களை பற்றி கூறமாட்டார்கள். ஆனால் பிரியா பவானி ஷங்கர் அதனை ரகசியமாக வைத்துக்கொள்ளாமல்  வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்பதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

priya bhavani shankar lover [Image Source :file image]

இது குறித்து பேசிய அவர் ” காதல் உறவை எதற்காக மறைக்கவேண்டும். நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருந்து காதலிக்கிறேன். இங்க யாரும் காதலிக்காமல் இல்லை. காதல் என்பது யாரும் பண்ணகூடாத விஷயமா..? இங்கு எல்லாரும் காதல் செய்கிறார்கள்.

priya bhavani shankar lover [Image Source :file image]

4-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு கூட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஒன்னும் திடீர் என்று புகைப்படங்களை வெளியிடவில்லை. ஏன்னுடைய வேலை இப்போது மாறிவிட்டது. அதனால் நான் புகைப்படங்களை வெளியிடமாட்டேன் என அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து காதல் செய்கிறேன். அது அப்படியே தொடர்ந்து கொண்டு  இருக்கிறது. அதில் ஒன்னும் தப்பு இல்லை” என அதிரடியாக கூறியுள்ளார்.

PriyaBhavaniShankar [Image Source : Twitter @PBSFansWorld]
மேலும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொம்மை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

19 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago