சினிமா

நீ சில்லறை பையன் தான்! கூல் சுரேஷை சீண்டிய பிரதீப்! எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘பிக் பாஸ்’ ப்ரோமோ!

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரதீப் என்று கூறலாம். ஒவ்வொரு சீசன்களிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் மக்களுடைய பேவரைட் போட்டியாளர்களாக இருப்பார்கள். அப்படி தான் இந்த 7-வது சீசனில் பிரதீப் ஆண்டனி விளையாடும் விதம் தங்களுக்கு மிகவும் பிடித்து போக மக்கள் அனைவரும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால், இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப் விளையாடிய விதம் அனைவர்க்கும் எரிச்சலை கொடுத்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ‘ பிரதீப் சற்று கோபத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார். பிறகு வாக்கு வாதத்தில் பிரதீப் கூல் சுரேசை பார்த்து அவன் ஒரு சில்லறை என்று கூறுகிறார். உடனடியாக விஸ்ணு யாரை சொல்கிறாய் கூல் சுரேஷ் அண்ணனா? என்று கேட்கிறார்.

அதற்கு பிரதீப் ஆமா அவன் தான் சில்லறை பையன்  என்று கூறினார். அதற்கு கூல் சுரேஷ் என்னையா சொன்ன என்று கத்தி கேட்கிறார் நீ சில்லறை பையன் தான் என பிரதீப் மீண்டும் கூறுகிறார். இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த கூல் சுரேஷ் செருப்பால அடிப்பேன் மரியாதை இல்லாமல் பேசாத என்று கூறுகிறார்.

இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் வாக்கு வாதமே ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நிக்சன் அண்ணா விடுங்க என்று பிரதீப்பை பார்த்து சொல்ல நிக்சனை நெஞ்சில் கைவைத்து தள்ளி சென்று போனார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் நீங்கள் விளையாடுவது தவறு என கூறினார்கள்.

அதைப்போல பெண் போட்டியாளர் ஒருவரும் இப்படி செய்யாதீங்க அண்ணா என்பது போல கூற பிரதீப் மிகவும் கோபத்துடன் உன்னுடைய வேலையை மட்டும் பார்த்துவிட்டு போமா என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ இன்று நடைபெறும் எபிசோடில் இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ப்ரோமோவை பார்த்த பலரும் தவறு என்று தெரிந்தும் “நான் அப்படித்தான் பேசுவேன், விளையாடுவேன்” என்று அதீத நம்பிக்கையுடன் ப்ரதீப் விளையாடும் விதம் நன்றாக இல்லை என்றும் இதுவரை ப்ரதீப்பின் விளையாட்டை நம்பியவர்களுக்கு நேற்றில் இருந்து அந்த நம்பிக்கை காணாமலே போய் விட்டது என்பதே உண்மை எனவும் கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago