சென்னை:மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.அந்த மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் “கல்லறையும்,தாயின் கருவறை மட்டுமே பாதுகாப்பான இடம்” என்றும் SchoolisNotSafety,மேலும்,உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் […]
வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 […]
வேலூர்:ஜோஸ் ஆலுக்காஸில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற 15 கிலோ தங்கம்,500 கிராம் வைரம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக […]
மதுரை:ராமநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் உடலை மறுஉடற்கூராய்வு செய்வதற்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர்,கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது,அவ்வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை,போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். ஆனால்,மணிகண்டன் தனது பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் […]
தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவத்தில் அதிர்ச்சியளிக்கும் திருப்பம். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள் மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் நேற்று முன்தினம் அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து,உடனடியாக […]
தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள் மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சை சிகிச்சைக்காக வருகின்றனர். இந்நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் இன்று அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து,உடனடியாக மருத்துவர்கள் […]
திருச்சி:பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியரான சரவணன் என்பவர், தற்கொலை செய்து கொண்டது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம்,வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த நவ.19 ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் […]
திருவண்ணாமலை:நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான புகாரில் சிக்கிய அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்,அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவ,மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது,ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதன்காரணமாக,அவர் மீது போலீசார் போக்சோ உள்பட 14 பிரிவுகளின் கீழ் போலீசார் அடுத்தடுத்து […]
உத்தரபிரதேசம் லக்னோவில் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் 258 ஆமைகளுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மீனவர்களுக்கு பணம் கொடுத்து ஆமைகளை பிடிக்கச்சொல்லி பிற மாநிலங்களில் அதிக விலைக்கு விற்று வந்த கும்பல் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ₹2,460 ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை எஸ்டிஎஃப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மும்பையில் அகமதாபாத் நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 8 பேர் காயம். ஞாயிற்றுக்கிழமை மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிராவின் பால்கரின் என்ற இடைத்தை சேர்த்த டிரக் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மேலும் 8 பேர் பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் வேன் மீது மோதிய மல்டி ஆக்சில் கன்டெய்னர் லாரி ஓட்டுநருக்கு தெரியாததால் அங்கிருந்து வேகமாக சென்றதாகதெரிவித்தனர். […]
கரூர்:பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக,அவர் படித்த தனியார் பள்ளியின் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அக்கடிதத்தில்,”பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நானாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு யார் இந்த கொடுமையை செய்தார்கள் என்று வெளியே சொல்ல பயமாக உள்ளது’,என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து,கரூர் பள்ளி மாணவி உயிரிழந்த […]
கனடா:டொராண்டோவிற்கு அருகிலுள்ள ஹாமில்டன் நகரத்தில் உள்ள அமெரிக்கர் ஒருவரிடமிருந்து C$46 மில்லியன் ($36.5 மில்லியன்) மதிப்புள்ள கிரிப்டோகரன்சியைத் திருடியதாகக் கனடிய வாலிபர் கைது ஒருவர் செய்யப்பட்டுள்ளார். சிம் ஸ்வாப்பிங் எனப்படும் செல்போன் மோசடி மூலம் இந்த திருட்டு நடந்துள்ளதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த மோசடியானது பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்ணை ஹேக் செய்து இரண்டு அடுக்கு செக்யூரிட்டி பாஸ்வ்வ்ர்டை இடைமறித்து இந்த நூதன திருட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த விசாரணையானது பெடரல் பீரோ […]
ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் வசித்து வந்த சிவகுமார் மற்றும் அனிதா தம்பதியினரின் ஒரு வயது குழந்தை அக்ஷரா 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இது பற்றி எம் நரேந்தர், இன்ஸ்பெக்டர் (ஹபீப்நகர்) கூறுகையில், அக்ஷராவின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அல்லது ஷாப்பிங்கிற்கு வெளியே செல்லும்போதெல்லாம், அவர்கள் குழந்தையை அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் வசிக்கும் அவரது பாட்டியிடம் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி […]
புதுக்கோட்டை:12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி ஒருவர்,கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது,அங்கு வந்த திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞர்,அத்துமீறி வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.மேலும்,அந்த சிறுமியை தொந்தரவு செய்து அடித்தபோது அருகே இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் […]
கோவை:மாணவி தற்கொலை மற்றும் பாலியல் புகார் தொடர்பாக சின்மயா பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார்.இதனை அடுத்து,இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் […]
விழுப்புரம்:சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி சாட்சி விசாரணைக்காக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன்,இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. […]
வாராக்கடனுக்காக கையகப்படுத்திய ஹோட்டல் ஒன்றின் விலையை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் எஸ்.பி.ஐ. முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் கடன் மோசடி வழக்கில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரியை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து ஜெய்சால்மர் சதார் போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தின் அலோக் திர் தலைமறைவாகியுள்ளார். கோடவன் குழுமம் 2008-ம் ஆண்டு […]
முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் தி.மு.க. எம்பி டி.ஆர்.வி.ரமேஷ் அவர்களுக்கு பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் சொந்தமாக ஒரு முந்திரி தொழிற்சாலை உள்ளது.அத்தொழிற்சாலையில்,மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்,கடந்த மாதம் 19 ஆம் தேதி வேலைக்கு சென்ற கோவிந்தராஜ் வீடு திரும்பவில்லை.அதன்பின்னர்,அவர் உயிரிழந்து விட்டதாகவும்,அவரது உடல் அரசு மருத்துவமனையில் […]
லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷின் பாதுகாப்பிற்காக உடன் சென்ற […]