மந்திரங்களை உச்சரிப்பதால் மாற்றங்கள் நிகழுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Published by
K Palaniammal

Mantra –மந்திரங்களை கூறுவதன் மூலம் நமக்குள் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம்.

நம்முடைய உடலானது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானபூர்வமான உண்மை. ஒலி  என்ற சத்தம் நமக்கு மகிழ்ச்சியையும் தரும் பயத்தையும் தரும். உதாரணமாக நாம் அமைதியாக இருக்கும்போது இன்னிசை கேட்போம், அப்போது அது மகிழ்ச்சியை தரும் .ஆனால் திடீரென்று ஏதேனும் வெடிப்பது போல் சத்தம் கேட்டால் அது பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும்.

இப்படி ஒலிக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளது.  ஒலிக்கும் நம் உடலுக்கும் சம்பந்தம் உண்டு. மருத்துவத்தில் ஒலி  அதிர்வு சிகிச்சை என்ற ஒரு  சிகிச்சையே உள்ளது. நாம் பேசும்போதும் அப்படித்தான் சில வார்த்தைகள் நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதுபோல் மந்திரச் சொற்களும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் அகார  ஒகார  இதிலிருந்து பிறக்கக் கூடியது தான் மந்திரங்கள். உதாரணமாக ஓம் என்று உச்சரிக்கும் போது அந்த சத்தமானது நம் காது வலியாக சென்று நரம்பு மண்டலத்தில் ஊடுருவி எங்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்து நம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

கந்த சஷ்டி கவசத்தில் ஒரு சில வரிகள் உள்ளது ர ர ர ர ர ர ர ரி ரி ரி.. இந்த வார்த்தை எழுத தெரியாமல் இல்லை இந்த சத்தத்திற்கு  என்று ஒரு சக்தி உள்ளது. அது நம் மூளைக்குள் சென்று மாற்றத்தை ஏற்படுத்தும் .இதனால் தான் சக்தி வாய்ந்த மந்திரங்களை சரியாக உச்சரிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

ஏனென்றால் உச்சரிப்பு மாறுபட்டால் அதன் பலனும் மாறுபடும். பயம் இருந்தால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கச் சொல்வார்கள் அதை  படிக்கும்போது அந்த வார்த்தைகள் நமக்குள் சென்று தைரியத்தை ஏற்படுத்தும் .இது உணர்வுபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

மேலும் மந்திரங்கள் உடலுக்கு உஷ்ணத்தை தரும் ,ஆத்ம சக்தியை அதிகப்படுத்தி சரியான இயக்கத்திற்கு நம்மை எடுத்துச் செல்லும். நாம் சோர்வுற்று இருக்கும்போது சில தன்னம்பிக்கையான வார்த்தைகளை கேட்கும் போதும் பார்க்கும் போதும் நமக்குள் ஒரு தைரியமும் மாற்றமும் நிகழ்கிறது தானே..

அப்படிப்பட்ட சாதாரண வார்த்தைகளுக்கே சக்தி  இருக்கும்போது கடவுளின் மந்திரங்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். ஆன்மீகமும் கடவுள் நம்பிக்கையும் வார்த்தைகளால் சொல்வதைக் காட்டிலும் அதை உணர்வு பூர்வமாக மட்டுமே உணர முடியும். அதை உணர்ந்தவர்கள் அதன் பலனை பெற்றிருப்பார்கள்.

Published by
K Palaniammal

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

1 hour ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

2 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

3 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

6 hours ago