வீட்டில் மற்றவர்கள் தூங்கும் போது விளக்கேற்றி பூஜை செய்யலாமா?

Published by
K Palaniammal

பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் பூஜை செய்யும் நேரத்தில் நம் வீட்டில் நபர்கள் தூங்குவது சரியா என தோன்றும். ஒரு சிலர் இரவுவேலை செய்துவிட்டு தூங்குவார்கள் இவ்வாறு இருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா.. என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முந்தைய நாட்களில் நம் வாழ்க்கை இயற்கையை சார்ந்து தான் இருந்தது .பொழுது விடிந்ததும் வேலைக்குச் சென்று பொழுது சாய்ந்ததும் வீட்டிற்கு வந்து விடுவோம் ஆனால் தற்போது மாறி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் வேலையில் மாற்றமும், கூடவே நம் உடலிலும் மாற்றமும் வந்துவிட்டது இரவு வேலை செய்துவிட்டு பகல் பொழுதில் தூங்குவது என அப்படியே மாறிவிட்டது பலருடைய வாழ்க்கை.

அப்படி வீட்டில் பகலில் தூங்கும்போது வழிபாட்டை நாம் செய்யாமலும் இருந்து விட முடியாது அதே நேரத்தில் இரவு வேலை செய்துவிட்டு காலையில் தூங்குபவரை நம்மால் எழுப்பவும் முடியாது இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மன சஞ்சலமும் கவலையும் ஏற்படும்.

தொழில் என்பது தான் முதல் கடவுள், அதனால் தான் செய்யும் தொழிலே தெய்வம் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். வேலை செய்து முடித்தால் அடுத்த நேரம் ஓய்வு நேரம் ஆகத்தான் இருக்க வேண்டும் அதனால்  வழிபாட்டிற்காக தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை ஒரு நாள் என்றால் பரவாயில்லை ஆனால் நாம் தினமும் வழிபடுவதற்கு அவர்களின் தூக்கத்தை கெடுத்து விட முடியாது அல்லவா… ஆகவே அவர்கள் தூங்கிக் கொள்ளலாம் தவறில்லை. வழிபாடு செய்யும் நாம் தாராளமாக விளக்கேற்றி, பூஜை செய்து கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் கவனிப்போடு இருக்க வேண்டும்

பூஜை அறை தனியாக உள்ளது என்றால் பிரச்சனை இல்லை ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறையில் படுத்திருப்பார்கள் பூஜை அறையில் நாம் நிம்மதியாக பூஜை செய்து கொள்ளலாம். ஒரு சிலர் வீடுகள் சிறிதாக இருக்கும் ஒரே அறையில் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் அவ்வாறு உள்ளவர்கள் வீட்டில் ஒரு புறமாகவோ  அல்லது செல்ப்புகளிலோ தான்  பூஜை அறையை வைத்திருப்பார்கள், அவ்வாறு இருப்பின் பூஜை அறை நேராக படுக்காமல் ஒரு புறமாக படுக்கச் சொல்லிவிட்டு பூஜை செய்யலாம் விளக்கேற்றி வழிபடலாம். இறைவன் நமக்கு தாயும் தந்தையும் போல. நம் வீட்டில் நமது அப்பா அம்மா நம் நிலையை புரிந்து கொண்டு மகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள் அது போல் தான் இறைவனும்  ,இது  ஒரு குற்றமாக இருக்காது.

எனவே மன சங்கடம் இல்லாமல், சந்தோஷமாகவும், தைரியமாகவும் விளக்கேற்றி வழிபாடு செய்து இறைவனின் நல்ஆசியை பெறுங்கள் .

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

1 minute ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

6 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

29 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

2 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

2 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago