#image_title
job vacancy: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
அதன்படி முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை பணியாளர், நகல் வாசிப்பாளர், கட்டளை எழுத்தர், ஓட்டுனர், நகல் பரிசோதகர் , இரவு காவலர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென்/வாட்டர்வுமன் மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் உள்ளிட்ட 17 பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 01.07.2006க்குப் பிறகு பிறந்திருக்கக்கூடாது மற்றும் 01.07.2024 தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் 10-ம் வகுப்பு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒளிப்பட நகல் எடுப்பவர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு முன் அனுபவம் தேவைப்படுகிறது. விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தங்கள் மாவட்டங்களை தேர்வு செய்து அங்குள்ள உள்ள காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு உள்ளனர். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 27.05.2024-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…