#image_title
job vacancy: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 17 பணிகளுக்கு மொத்தமாக 2329 பணியிடங்கள் உள்ளன.
அதன்படி முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை பணியாளர், நகல் வாசிப்பாளர், கட்டளை எழுத்தர், ஓட்டுனர், நகல் பரிசோதகர் , இரவு காவலர் மற்றும் மசால்ஜி, வாட்டர்மென்/வாட்டர்வுமன் மற்றும் ஒளிப்பட நகல் எடுப்பவர் உள்ளிட்ட 17 பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 01.07.2006க்குப் பிறகு பிறந்திருக்கக்கூடாது மற்றும் 01.07.2024 தேதியில் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். 01.07.2024 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அனைத்து பணிகளுக்கும் 10-ம் வகுப்பு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒளிப்பட நகல் எடுப்பவர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு முன் அனுபவம் தேவைப்படுகிறது. விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தங்கள் மாவட்டங்களை தேர்வு செய்து அங்குள்ள உள்ள காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படு உள்ளனர். விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 27.05.2024-க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவேண்டும்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…