வேலைவாய்ப்பு

தமிழக மாவட்ட நீதிமன்ற நீதிபதி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.! LAW முடித்திருந்தால் போதும்.!

Published by
மணிகண்டன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (01-ஜூலை-2023) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் – 50 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட சட்ட கல்லூரியில் குறிப்பிட்ட வருட இடைவெளிக்குள் சட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும்.
  • சட்டப்படிப்பு முடித்து தற்போது வரையில் வழக்கறிஞர் துறையில் பணியாற்றி இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூ.51,550/-  முதல் ரூ.63,070/- + மேற்படி செலவீனங்கள் அடங்கும்.

வயது வரம்பு : 

  • குறைந்தபட்சம் 35 வயது முதல் 60 வயது வரையில்.
  • பணிக்கேற்ப அதிகபட்ச வயது வரம்பு மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • ஆன்லைன் தேர்வு, நேர்முக தேர்வுகள் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 01 ஜூலை 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் – ரூ.2000/- (SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை : 

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ தளமான www.mhc.tn.gov.inக்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் நீதிபதிகள் பணிக்கு விண்ணப்பிக்க இருக்கும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதன் பிறகு ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

6 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

19 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

37 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

45 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

1 hour ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

2 hours ago